Newsஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு

-

இந்தியாவில் மீண்டும் ஒமைக்காரனின் உருமாறிய பிஏ வகை வைரஸ் பரவுவது அதிகரிக்க துவங்கி உள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தொழில் கல்லூரியில் ஒருவருக்கு பிஏ 4 வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பிஏ 5 வகை வைரஸ் மற்றொரு நபருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் கண்டறியப்பட்ட நபரிடம் இருந்து மருத்துவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மிக குறுகிய கால இடைவெளியில் ஓமைக்ரானின் உருமாறிய வடிவமான பிஏ வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. பிஏ 5 வகை வைரஸ் கண்டறியப்பட்ட இரு நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் மிக குறைந்த அளவிலேயே அறிகுறிகள் காணப்படுவதால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மருத்துவ மாதிரிகள் தொடர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. பிஏ 5 வகை வைரஸ் இந்தியாவில் குஜராத் மாநிலத்தை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக நடத்தப்பட்ட ஆர்டி – பிசிஆர் சோதனகைளில் பிஏ4 வகை வைரஸ் பரவ வில்லை என்பது தெரிய வந்துள்ளது. பிஏ5 வகை வைரஸ் இரண்டாவது நபருக்கு பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிஏ 4 மற்றும் பிஏ 5 வகை உருமாறிய வைரஸ்கள் வேகமாக பரவவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒமைக்ரானின் உருமாறிய வைரஸ்களின் வகைகள் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Latest news

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...

பாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு கடுமையான விதிகள்

பல ஆஸ்திரேலியர்கள் விடுமுறை கிடைத்தவுடன் பாலிக்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர். கடற்கரைக்குச் செல்ல MOPED அல்லது மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால் பாலி அதிகாரிகள்...