Newsஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு

-

இந்தியாவில் மீண்டும் ஒமைக்காரனின் உருமாறிய பிஏ வகை வைரஸ் பரவுவது அதிகரிக்க துவங்கி உள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தொழில் கல்லூரியில் ஒருவருக்கு பிஏ 4 வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பிஏ 5 வகை வைரஸ் மற்றொரு நபருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் கண்டறியப்பட்ட நபரிடம் இருந்து மருத்துவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மிக குறுகிய கால இடைவெளியில் ஓமைக்ரானின் உருமாறிய வடிவமான பிஏ வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. பிஏ 5 வகை வைரஸ் கண்டறியப்பட்ட இரு நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் மிக குறைந்த அளவிலேயே அறிகுறிகள் காணப்படுவதால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மருத்துவ மாதிரிகள் தொடர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. பிஏ 5 வகை வைரஸ் இந்தியாவில் குஜராத் மாநிலத்தை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக நடத்தப்பட்ட ஆர்டி – பிசிஆர் சோதனகைளில் பிஏ4 வகை வைரஸ் பரவ வில்லை என்பது தெரிய வந்துள்ளது. பிஏ5 வகை வைரஸ் இரண்டாவது நபருக்கு பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிஏ 4 மற்றும் பிஏ 5 வகை உருமாறிய வைரஸ்கள் வேகமாக பரவவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒமைக்ரானின் உருமாறிய வைரஸ்களின் வகைகள் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Latest news

பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளரின் புத்தகங்கள் பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கம்

விருது பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் கிரெய்க் சில்விக்கு எதிரான கடுமையான குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளால் இலக்கிய உலகம் அதிர்ந்துள்ளது. அவரது அனைத்து படைப்புகளையும் சந்தை மற்றும் பள்ளி...

ஆஸ்திரேலிய பாதாள உலகத் தலைவர் ஈராக்கில் கைது

ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையினரால் தேடப்படும் முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவரான Kazem Hamad ஈராக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏராளமான பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்...

ஆஸ்திரேலியா முழுவதும் அமேசானுக்கு எதிராக பாரிய போராட்டங்கள்

பில்லியனர் ஜெஃப் பெசோஸின் அமேசானுக்கு எதிராக ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு பெரிய தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய தொழிலாளர்களை அமேசான் சுரண்டுவதையும் உள்ளூர் வணிகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும்...

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...

விக்டோரியன் பிரதமருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரா நகரத்திற்கு விஜயம் செய்த விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன், உள்ளூர்வாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். போராட்டக்காரர்களைத் தவிர்த்து, ஒரு கட்டிடத்தின் பின் கதவு...