Newsஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு

-

இந்தியாவில் மீண்டும் ஒமைக்காரனின் உருமாறிய பிஏ வகை வைரஸ் பரவுவது அதிகரிக்க துவங்கி உள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தொழில் கல்லூரியில் ஒருவருக்கு பிஏ 4 வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பிஏ 5 வகை வைரஸ் மற்றொரு நபருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் கண்டறியப்பட்ட நபரிடம் இருந்து மருத்துவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மிக குறுகிய கால இடைவெளியில் ஓமைக்ரானின் உருமாறிய வடிவமான பிஏ வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. பிஏ 5 வகை வைரஸ் கண்டறியப்பட்ட இரு நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் மிக குறைந்த அளவிலேயே அறிகுறிகள் காணப்படுவதால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மருத்துவ மாதிரிகள் தொடர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. பிஏ 5 வகை வைரஸ் இந்தியாவில் குஜராத் மாநிலத்தை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக நடத்தப்பட்ட ஆர்டி – பிசிஆர் சோதனகைளில் பிஏ4 வகை வைரஸ் பரவ வில்லை என்பது தெரிய வந்துள்ளது. பிஏ5 வகை வைரஸ் இரண்டாவது நபருக்கு பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிஏ 4 மற்றும் பிஏ 5 வகை உருமாறிய வைரஸ்கள் வேகமாக பரவவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒமைக்ரானின் உருமாறிய வைரஸ்களின் வகைகள் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...