Newsஎதற்காக 'சாரி'...போலீசையே குழம்ப வைத்த மாணவர்கள்

எதற்காக ‘சாரி’…போலீசையே குழம்ப வைத்த மாணவர்கள்

-

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளின் சுவர்கள், வீதிகள் போன்ற பல இடங்களில் சிவப்பு நிறத்தில், பெரிய எழுத்துக்களால் சாரி என எழுதப்பட்டுள்ளது. கைகளால் எழுதப்பட்டு, திரும்பி பக்கமெல்லாம் சாரி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி நிர்வாகிகள், பொது மக்கள் என பலரும் இதை யார் எழுதினார்கள், எதற்காக சாரி என குழம்பிப் போயினர்.

இது பற்றி போலீசில் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலில் பள்ளி நிர்வாகத்தினர் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளால் கோபமடைந்த மாணவர்கள் யாராவது இதை செய்திருக்கலாம் என்றே அனைவரும் நினைத்தனர். இருந்தாலும் எதற்காக சாரி கேட்டார்கள் என இப்போது வரை காரணம் தெரியவில்லை.

கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மர்மமான முறையில் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். உணவு விநியோகம் செய்யும் நபர்கள் பயன்படுத்தும் பெரிய பையில் இருந்து சிவப்பு நிற சாயத்தால் அவர்கள் பல இடங்களில் சாரி என்று எழுதுவது கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பாதிவாகி உள்ளது.

அந்த நபர்கள் யார், எதற்காக இப்படி செய்தார்கள் என போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். அந்த மர்ம நபர்களை அடையாளம் கண்டு, கைது செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் இது போன்று செய்வது கர்நாடக போலீஸ் விதிகளின் படி தண்டைக்குரிய குற்றமாகும். அதனால் அந்த மர்ம நபர்களை கண்டறிய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Latest news

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக விக்டோரியா மருத்துவமனைகளில் பல அறுவை சிகிச்சைகள் ரத்து

விக்டோரியாவில் உள்ள பொது மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சுகாதார ஊழியர்கள் தங்கள் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய...

பிரபலமான விக்டோரியன் Resort-ஐ தாக்கிய திடீர் வெள்ளம்

விக்டோரியாவில் வை நதி, கென்னட் நதி, Cumberland நதி மற்றும் Lorne-ஐ சுற்றியுள்ள பகுதிகளை திடீர் வெள்ளம் நெருங்கி வருவதால், மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு...

சிட்னி விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட பல விமானங்கள்

சிட்னி Kingsford Smith விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறையால் நேற்று ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. பல ஊழியர்கள் நோய்வாய்ப்பட்ட மற்றும்...