Newsஎதற்காக 'சாரி'...போலீசையே குழம்ப வைத்த மாணவர்கள்

எதற்காக ‘சாரி’…போலீசையே குழம்ப வைத்த மாணவர்கள்

-

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளின் சுவர்கள், வீதிகள் போன்ற பல இடங்களில் சிவப்பு நிறத்தில், பெரிய எழுத்துக்களால் சாரி என எழுதப்பட்டுள்ளது. கைகளால் எழுதப்பட்டு, திரும்பி பக்கமெல்லாம் சாரி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி நிர்வாகிகள், பொது மக்கள் என பலரும் இதை யார் எழுதினார்கள், எதற்காக சாரி என குழம்பிப் போயினர்.

இது பற்றி போலீசில் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலில் பள்ளி நிர்வாகத்தினர் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளால் கோபமடைந்த மாணவர்கள் யாராவது இதை செய்திருக்கலாம் என்றே அனைவரும் நினைத்தனர். இருந்தாலும் எதற்காக சாரி கேட்டார்கள் என இப்போது வரை காரணம் தெரியவில்லை.

கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மர்மமான முறையில் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். உணவு விநியோகம் செய்யும் நபர்கள் பயன்படுத்தும் பெரிய பையில் இருந்து சிவப்பு நிற சாயத்தால் அவர்கள் பல இடங்களில் சாரி என்று எழுதுவது கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பாதிவாகி உள்ளது.

அந்த நபர்கள் யார், எதற்காக இப்படி செய்தார்கள் என போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். அந்த மர்ம நபர்களை அடையாளம் கண்டு, கைது செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் இது போன்று செய்வது கர்நாடக போலீஸ் விதிகளின் படி தண்டைக்குரிய குற்றமாகும். அதனால் அந்த மர்ம நபர்களை கண்டறிய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Latest news

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் விமானங்களில் Power Banks-ஐ எடுத்துச் செல்ல தடை

டிசம்பர் முதல் பல புதிய விமானப் பயண விதிகள் அமலுக்கு வரும் என்றும், இது ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விர்ஜின், குவாண்டாஸ்...

Modified மின்-பைக்குகளை தடை செய்யும் விக்டோரியாவின் மெட்ரோ மற்றும் பிராந்திய ரயில் சேவைகள்

பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக விக்டோரியாவின் ரயில் வலையமைப்பில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளுக்கு புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21 முதல், மெட்ரோ மற்றும் பிராந்திய ரயில் சேவைகளில்...

குயின்ஸ்லாந்தில் பிறந்த உலகின் மிகச்சிறிய குழந்தை

குயின்ஸ்லாந்தில் பிறந்த குழந்தைகளிலேயே மிகவும் சிறியதாக சார்லி ஜோன்ஸ் என்ற ஆண் குழந்தை வரலாறு படைத்துள்ளது. அவரது எடை ஒரு கோக் கேனை விடக் குறைவாக, 360...

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் உள்ள Brown பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து Ivy...