Cinemaபிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் அட்லி முடிவு

பிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் அட்லி முடிவு

-

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து பிகில் படத்தை இயக்கினார் அட்லி. விஜய் ஹீரோவாக நடித்த இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ராயப்பன் என்ற தாதா கதாபாத்திரத்திலும், மைக்கேல் என்ற கால்பந்தாட்ட வீரர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதில் தாதா கதாபாத்திரத்தில் வயதானவர் போன்ற வேடத்தில் விஜய் நடித்திருந்தார்.

பிகில் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாக்கள் எதையும் இயக்காமல், இந்தி படங்களை இயக்க சென்று விட்டார் இயக்குனர் அட்லி. இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் லயன் என பெயரிடப்பட்ட படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்தியில் நயன்தாரா நடிக்கும் முதல் படமாகும், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் இனி நடிக்க போகும் தளபதி 68 படத்தை இயக்குனர் அட்லி தான் இயக்க போவதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்த சமயத்தில், பிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அட்லி முடிவு செய்திருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதில் ராயப்பன் என்ற வயதான கதாபாத்திரத்தை முதன்மை கதாபாத்திரமாக வைத்து இரண்டாம் பாகத்தை இயக்க அட்லி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள், சமூக வலைதள பக்கங்களில் பிகில் படம் பற்றிய புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து, இவர்களில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் யார் என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ராயப்பன் கதாபாத்திரம் பற்றிய தகவல்களையும் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். இதை பார்த்த இயக்குனர் அட்லி, தனக்கே உரிய பாணியில், செஞ்சுட்டா போச்சு என பதில் பதிவு போட்டுள்ளார். இயக்குனர் அட்லியே இவ்வாறு கூறி விட்டதால் பிகில் இரண்டாம் பாகம் வருவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Latest news

“ரஷ்யா – அமெரிக்கா” மீது கவனம் செலுத்தும் உலகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சூசகமாக தெரிவித்துள்ளார். டிரம்பை சந்திக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறந்த இடம் என்று ரஷ்ய...

ஆஸ்திரேலிய வணிக வருமானம் – ஜூன் 2025 தரவு

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஜூன் 2025 இல் வணிக விற்றுமுதல் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. கலை மற்றும் பொழுதுபோக்கு சேவைகள் துறை...

ஆஸ்திரேலியாவில் குறைந்து வரும் ஆதரவு சேவை மீதான நம்பிக்கை

வீட்டு மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான ஆலோசனை மற்றும் உதவிக்காக ஹாட்லைனுக்கு பெறப்பட்ட அழைப்புகளில் கிட்டத்தட்ட 60% பதிலளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆலோசனை சேவை வழங்குநரான DVConnect,...

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

டிஜிட்டல் பயணிகள் அட்டை முறையை அறிமுகப்படுத்தும் சிட்னி விமான நிலையம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிலையமான சிட்னி விமான நிலையம், சர்வதேச பயணிகளுக்காக digital incoming passenger card-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Qantas-உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் உள்வரும்...