Cinemaபிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் அட்லி முடிவு

பிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் அட்லி முடிவு

-

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து பிகில் படத்தை இயக்கினார் அட்லி. விஜய் ஹீரோவாக நடித்த இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ராயப்பன் என்ற தாதா கதாபாத்திரத்திலும், மைக்கேல் என்ற கால்பந்தாட்ட வீரர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதில் தாதா கதாபாத்திரத்தில் வயதானவர் போன்ற வேடத்தில் விஜய் நடித்திருந்தார்.

பிகில் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாக்கள் எதையும் இயக்காமல், இந்தி படங்களை இயக்க சென்று விட்டார் இயக்குனர் அட்லி. இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் லயன் என பெயரிடப்பட்ட படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்தியில் நயன்தாரா நடிக்கும் முதல் படமாகும், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் இனி நடிக்க போகும் தளபதி 68 படத்தை இயக்குனர் அட்லி தான் இயக்க போவதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்த சமயத்தில், பிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அட்லி முடிவு செய்திருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதில் ராயப்பன் என்ற வயதான கதாபாத்திரத்தை முதன்மை கதாபாத்திரமாக வைத்து இரண்டாம் பாகத்தை இயக்க அட்லி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள், சமூக வலைதள பக்கங்களில் பிகில் படம் பற்றிய புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து, இவர்களில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் யார் என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ராயப்பன் கதாபாத்திரம் பற்றிய தகவல்களையும் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். இதை பார்த்த இயக்குனர் அட்லி, தனக்கே உரிய பாணியில், செஞ்சுட்டா போச்சு என பதில் பதிவு போட்டுள்ளார். இயக்குனர் அட்லியே இவ்வாறு கூறி விட்டதால் பிகில் இரண்டாம் பாகம் வருவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...