Cinemaபிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் அட்லி முடிவு

பிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் அட்லி முடிவு

-

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து பிகில் படத்தை இயக்கினார் அட்லி. விஜய் ஹீரோவாக நடித்த இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ராயப்பன் என்ற தாதா கதாபாத்திரத்திலும், மைக்கேல் என்ற கால்பந்தாட்ட வீரர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதில் தாதா கதாபாத்திரத்தில் வயதானவர் போன்ற வேடத்தில் விஜய் நடித்திருந்தார்.

பிகில் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாக்கள் எதையும் இயக்காமல், இந்தி படங்களை இயக்க சென்று விட்டார் இயக்குனர் அட்லி. இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் லயன் என பெயரிடப்பட்ட படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்தியில் நயன்தாரா நடிக்கும் முதல் படமாகும், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் இனி நடிக்க போகும் தளபதி 68 படத்தை இயக்குனர் அட்லி தான் இயக்க போவதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்த சமயத்தில், பிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அட்லி முடிவு செய்திருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதில் ராயப்பன் என்ற வயதான கதாபாத்திரத்தை முதன்மை கதாபாத்திரமாக வைத்து இரண்டாம் பாகத்தை இயக்க அட்லி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள், சமூக வலைதள பக்கங்களில் பிகில் படம் பற்றிய புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து, இவர்களில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் யார் என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ராயப்பன் கதாபாத்திரம் பற்றிய தகவல்களையும் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். இதை பார்த்த இயக்குனர் அட்லி, தனக்கே உரிய பாணியில், செஞ்சுட்டா போச்சு என பதில் பதிவு போட்டுள்ளார். இயக்குனர் அட்லியே இவ்வாறு கூறி விட்டதால் பிகில் இரண்டாம் பாகம் வருவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...