Newsஇலங்கைக்கு இந்தியாவின் உதவி தொடரும்...பிரதமர் நரேந்திர மோடி உறுதி

இலங்கைக்கு இந்தியாவின் உதவி தொடரும்…பிரதமர் நரேந்திர மோடி உறுதி

-

பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மாநில தலைநகர் சென்னைக்கு வந்தார். அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சிலப்பதிகாரம் புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக பாரம்பரிய முறைப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திட்டங்களை துவக்கி வைத்த பிறகு விழாவில் உரையாற்றி பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் வணக்கம் என கூறி தனது உரையை துவங்கினார். தமிழ் பற்றியும், தமிழர்கள் பற்றியும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு பற்றியும் புகழ்ந்து பேசினார். மகாகவி பாரதியாரின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே” என்ற வரிகளை குறிப்பிட்ட பிரதமர், தமிழர்களின் புகழ் உலகம் முழுவதும் பரவி இருப்பதை பெருமையுடன் கூறினார்.

“தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை விரிவுபடுத்த இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தை சேர்ந்த யாராவது ஒருவர் தலை சிறந்தவராக விளங்குகிறார். இந்தியா வென்ற 16 பதக்கங்களில் தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பங்கு உள்ளது. செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய கல்வி கொள்கையில் இந்திய மொழிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். நட்பு நாடான இலங்கை நெருக்கடியில் இருந்து மீளவும், பொருளாததார தேக்க நிலையில் இருந்து மீண்டு வரவும் இந்தியா தொடர்ந்து உதவும். இலங்கைக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக ஏராளமான உதவிகளை இந்தியா செய்து வருகிறது” என பிரதமர் நரேந்திர மோடி விழாவில் தெரிவித்தார்.

Latest news

அமெரிக்காவிற்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதர்

அமெரிக்காவிற்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதராக பாதுகாப்பு செயலாளர் கிரெக் மோரியார்டியை நியமிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. "ஆஸ்திரேலியா-அமெரிக்க கூட்டணியை முன்னேற்றுவதில் மோரியார்டிக்கு தனித்துவமான அனுபவம் உள்ளது" என்று பிரதமர்...

விக்டோரியாவில் அடுத்த வாரம் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை எட்டும்

விக்டோரியாவில் நீண்ட வார இறுதியிலிருந்து அடுத்த வாரம் வரை வரலாறு காணாத வெப்பமான வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மெல்பேர்ணில் 40 டிகிரி...

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர் தவறுகளை படம்பிடிக்கும் AI கேமரா

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 800 ஓட்டுநர்கள் புதிய AI சாலை பாதுகாப்பு கேமராக்களால் பிடிக்கப்படுவதாக காவல்துறை கூறுகிறது. இந்த நீண்ட வார இறுதியில் போக்குவரத்து...

உலகையே வியப்பில் ஆழ்த்திய Alex Honnold-இன் புதிய சாதனை

உலகப் புகழ்பெற்ற "Free Solo" மலையேற்ற வீரர் Alex Honnold, தைவானில் உள்ள 508 மீட்டர் உயரமுள்ள Taipei 101 கட்டிடத்தை வெற்றிகரமாக ஏறி புதிய...

உலகையே வியப்பில் ஆழ்த்திய Alex Honnold-இன் புதிய சாதனை

உலகப் புகழ்பெற்ற "Free Solo" மலையேற்ற வீரர் Alex Honnold, தைவானில் உள்ள 508 மீட்டர் உயரமுள்ள Taipei 101 கட்டிடத்தை வெற்றிகரமாக ஏறி புதிய...

அடிலெய்டில் காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட குழந்தை

அடிலெய்டின் வடகிழக்கில் ஒரு பரபரப்பான சாலையில் ஒரு சிறுவன் காரில் இருந்து தூக்கி எறியப்பட்டான். வாகனம் ஒரு சந்திப்பு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​திறந்திருந்த காரின் கதவு...