Newsஇலங்கைக்கு இந்தியாவின் உதவி தொடரும்...பிரதமர் நரேந்திர மோடி உறுதி

இலங்கைக்கு இந்தியாவின் உதவி தொடரும்…பிரதமர் நரேந்திர மோடி உறுதி

-

பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மாநில தலைநகர் சென்னைக்கு வந்தார். அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சிலப்பதிகாரம் புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக பாரம்பரிய முறைப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திட்டங்களை துவக்கி வைத்த பிறகு விழாவில் உரையாற்றி பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் வணக்கம் என கூறி தனது உரையை துவங்கினார். தமிழ் பற்றியும், தமிழர்கள் பற்றியும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு பற்றியும் புகழ்ந்து பேசினார். மகாகவி பாரதியாரின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே” என்ற வரிகளை குறிப்பிட்ட பிரதமர், தமிழர்களின் புகழ் உலகம் முழுவதும் பரவி இருப்பதை பெருமையுடன் கூறினார்.

“தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை விரிவுபடுத்த இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தை சேர்ந்த யாராவது ஒருவர் தலை சிறந்தவராக விளங்குகிறார். இந்தியா வென்ற 16 பதக்கங்களில் தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பங்கு உள்ளது. செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய கல்வி கொள்கையில் இந்திய மொழிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். நட்பு நாடான இலங்கை நெருக்கடியில் இருந்து மீளவும், பொருளாததார தேக்க நிலையில் இருந்து மீண்டு வரவும் இந்தியா தொடர்ந்து உதவும். இலங்கைக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக ஏராளமான உதவிகளை இந்தியா செய்து வருகிறது” என பிரதமர் நரேந்திர மோடி விழாவில் தெரிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிவாயு திட்டத்தை 2070 வரை நீட்டிக்க ஒப்புதல்

ஆஸ்திரேலியாவில் வடமேற்கு Shelf Gas திட்டத்தை 2070 வரை நீட்டிக்க சுற்றுச்சூழல் அமைச்சர் முர்ரே வாட் ஒப்புதல் அளித்துள்ளார். Woodside அதன் மேற்கு ஆஸ்திரேலிய எரிவாயு நிலையத்திற்கு...

ஆஸ்திரேலியாவில் நிலவும் பால் பற்றாக்குறை

நியூ சவுத் வேல்ஸில் வெள்ளப்பெருக்கு உள்ளூர் பல்பொருள் அங்காடிகளைப் பாதிப்பதால் ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்கள் பால் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளது. பால் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்...

NSW-வில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கும் அரசாங்கம்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் மற்றும் வணிகங்கள் உட்பட 794 இடங்கள் வாழத் தகுதியற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதுப்பித்தல் பணிகளை முடிக்க...

தெற்கு ஆஸ்திரேலியாவில் $40 மில்லியன் செலவில் திறக்கவுள்ள புதிய Safari Resort

தெற்கு ஆஸ்திரேலியா தனது சுற்றுலா சலுகைகளை விரிவுபடுத்த 40 மில்லியன் டாலர் செலவில் ஆப்பிரிக்க கருப்பொருள் கொண்ட ஒரு புதிய Safari Resort இன்றை திறக்க...

தெற்கு ஆஸ்திரேலியாவில் $40 மில்லியன் செலவில் திறக்கவுள்ள புதிய Safari Resort

தெற்கு ஆஸ்திரேலியா தனது சுற்றுலா சலுகைகளை விரிவுபடுத்த 40 மில்லியன் டாலர் செலவில் ஆப்பிரிக்க கருப்பொருள் கொண்ட ஒரு புதிய Safari Resort இன்றை திறக்க...

மாணவர்களை தவறாக வழிநடத்திய Online கல்லூரிக்கு $30 மில்லியன் அபராதம்

பின்தங்கிய மாணவர்களை தாங்கள் பதிவு செய்யாத படிப்புகளில் சேர்ப்பதற்கு மோசமான நடைமுறைகளைப் பயன்படுத்தியதற்காக ஆன்லைன் டிப்ளமோ கல்லூரிக்கு $30 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Captain Cook கல்லூரி...