Newsபோரினால் சீரழியும் உக்ரைன் - நைட்ரிக் அமில தாங்கியை தாக்கிய ரஷ்யா...

போரினால் சீரழியும் உக்ரைன் – நைட்ரிக் அமில தாங்கியை தாக்கிய ரஷ்யா – ஆபத்தில் மக்கள்

-

உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரில் நைட்ரிக் அமிலம் கொண்ட டாங்கரை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள செவெரோடோனெட்ஸ்க் நகரில் ரசாயன ஆலையில் நைட்ரிக் அமில டாங்கரை ரஷ்யா தாக்கியது என்று உள்ளூர் கவர்னர் செர்ஜி கெய்டே கூறினார்.

இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, மக்கள் தங்குமிடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கவர்னர் வலியுறுத்தினார்.

நைட்ரிக் அமிலம் சருமத்தில் பட்டாலும் சரி, சுவாசித்தாலும், உடலுக்குள் சென்றாலும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும்

ரஷ்யப் படைகளின் வான்வழித் தாக்குதலினால் ரசாயன ஆலையில் இருந்த நைட்ரிக் அமில டாங்கர் தாக்கப்பட்டது என்று ஆளுநர் செர்ஜி கெய்டே வெளியிட்ட சமூக ஊடக செய்தியில் தெரிவித்தார்.

செவரோடோனெட்ஸ்க் நகரில் ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுக்கு இடையே கடுமையான சண்டை நடபெற்றது.

“சோடா கரைசலில் செறிவூட்டப்பட்ட பாதுகாப்பு கவசங்களை தயாரித்து வைத்துக் கொள்வது நல்லது என்று அந்நகர கவர்னர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

செவரோடோனெட்ஸ்கில் உள்ள இரசாயன ஆலையில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல் பைத்தியக்காரத்தனமானது, மனிதாபிமானம் அற்றது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

ரஷ்ய இராணுவம், ரஷ்ய தளபதிகள் மற்றும் ரஷ்யாவின் வீரர்களும் பைத்தியங்கள் இல்லை என்று சொல்வதுதான் ஆச்சரியம் இல்லாதது என்று சமூக ஊடகமான டெலிகிராமில் நேற்று (2022, மே 31) பேசிய ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைனின் படைகளில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதியில் நைட்ரிக் அமிலம் இருந்த டேங்கர் “வெடித்தது” என்று மாஸ்கோ ஆதரவு பிரிவினைவாதிகளை மேற்கோள் காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.

“Azot இரசாயன ஆலையில், இரசாயனங்கள் கொண்ட ஒரு கொள்கலன் வெடித்தது. முதற்கட்டமாக, அந்த டேங்கரில் இருந்தது நைட்ரிக் அமிலம்,” என்று தெரியவதுள்ளது என லுகான்ஸ்க் மக்கள் குடியரசின் பிரதிநிதி ரோடியன் மிரோன்சிக், டெலிகிராம் செயலியில் தெரிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலிய உட்கட்டமைப்புக்களை சீர்குலைக்க முயற்சி

நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க...

திரும்பப் பெறப்பட்ட மற்றுமொரு Sunscreen தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் Sunscreen தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த கவலைகள் காரணமாக அவற்றை திரும்பப் பெறும் நிறுவனங்களின் வரிசையில் Cult beauty பிராண்டான Bondi Sands சமீபத்தியதாக மாறியுள்ளது. சிகிச்சை...

Shelby Cobra உட்பட 12 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை நடத்திய சோதனையில் 12 திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. $120,000 மதிப்புள்ள Shelby Cobra மாற்றத்தக்க காரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது Pentland Hills-இல்...

Berries பழங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார எச்சரிக்கை

Berries பழங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்து குறித்து புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள Raspberry, Blueberry மற்றும் Blackberries...

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் கட்டுமானத்...

விக்டோரிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம், கடை மற்றும் விருந்தோம்பல் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் ஜெசிந்தா...