Newsபோரினால் சீரழியும் உக்ரைன் - நைட்ரிக் அமில தாங்கியை தாக்கிய ரஷ்யா...

போரினால் சீரழியும் உக்ரைன் – நைட்ரிக் அமில தாங்கியை தாக்கிய ரஷ்யா – ஆபத்தில் மக்கள்

-

உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரில் நைட்ரிக் அமிலம் கொண்ட டாங்கரை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள செவெரோடோனெட்ஸ்க் நகரில் ரசாயன ஆலையில் நைட்ரிக் அமில டாங்கரை ரஷ்யா தாக்கியது என்று உள்ளூர் கவர்னர் செர்ஜி கெய்டே கூறினார்.

இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, மக்கள் தங்குமிடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கவர்னர் வலியுறுத்தினார்.

நைட்ரிக் அமிலம் சருமத்தில் பட்டாலும் சரி, சுவாசித்தாலும், உடலுக்குள் சென்றாலும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும்

ரஷ்யப் படைகளின் வான்வழித் தாக்குதலினால் ரசாயன ஆலையில் இருந்த நைட்ரிக் அமில டாங்கர் தாக்கப்பட்டது என்று ஆளுநர் செர்ஜி கெய்டே வெளியிட்ட சமூக ஊடக செய்தியில் தெரிவித்தார்.

செவரோடோனெட்ஸ்க் நகரில் ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுக்கு இடையே கடுமையான சண்டை நடபெற்றது.

“சோடா கரைசலில் செறிவூட்டப்பட்ட பாதுகாப்பு கவசங்களை தயாரித்து வைத்துக் கொள்வது நல்லது என்று அந்நகர கவர்னர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

செவரோடோனெட்ஸ்கில் உள்ள இரசாயன ஆலையில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல் பைத்தியக்காரத்தனமானது, மனிதாபிமானம் அற்றது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

ரஷ்ய இராணுவம், ரஷ்ய தளபதிகள் மற்றும் ரஷ்யாவின் வீரர்களும் பைத்தியங்கள் இல்லை என்று சொல்வதுதான் ஆச்சரியம் இல்லாதது என்று சமூக ஊடகமான டெலிகிராமில் நேற்று (2022, மே 31) பேசிய ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைனின் படைகளில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதியில் நைட்ரிக் அமிலம் இருந்த டேங்கர் “வெடித்தது” என்று மாஸ்கோ ஆதரவு பிரிவினைவாதிகளை மேற்கோள் காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.

“Azot இரசாயன ஆலையில், இரசாயனங்கள் கொண்ட ஒரு கொள்கலன் வெடித்தது. முதற்கட்டமாக, அந்த டேங்கரில் இருந்தது நைட்ரிக் அமிலம்,” என்று தெரியவதுள்ளது என லுகான்ஸ்க் மக்கள் குடியரசின் பிரதிநிதி ரோடியன் மிரோன்சிக், டெலிகிராம் செயலியில் தெரிவித்தார்.

Latest news

பாக்டீரியாக்களை கொல்லும் ஒருவகை சிப்பி இனம்

ஆஸ்திரேலிய சிப்பியின் ஒரு இனம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகம் நடத்தியது. Sacostria glomerata எனப்படும்...

ஆஸ்திரேலியாவிலிருந்து மேலும் இரண்டு நாடுகளுக்கு மனிதாபிமான விசாக்கள்

சுமார் ஆயிரம் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியாவால் தற்காலிக மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் குடிமக்களுக்கு அக்டோபர் 2024 முதல் தற்போது...

ஆஸ்திரேலியர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்து வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்த புதிய அறிக்கையை மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 20 சதவீதம்...

ஆஸ்திரேலிய மாநிலங்களில் அதிகரித்துவரும் வெப்பநிலை

மேற்கு ஆஸ்திரேலியாவில் நேற்று அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த கோடையில் பெர்த் பெருநகர விமான நிலையத்தில் வெப்பநிலை 44.7 டிகிரியாகவும், நகரின் வெப்பநிலை...

கடந்த சில நாட்களாக விக்டோரியா சாலையில் அதிகரித்துள்ள விபத்துக்கள்

மெல்பேர்ண் கிழக்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மவுண்ட் ஈவ்லினில் உள்ள கிளெக் வீதியில் சாரதி...

உலகின் முதல் டிரில்லியனர் பற்றிய புதிய வெளிப்பாடு

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் சொத்துக்கள் குறித்த சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, எலோன் மஸ்க் மீண்டும் உலகின் பணக்காரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரது...