Newsஇந்தோனேசியப் பயணம் தொடர்பில் ஆஸ்திரேலியப் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்!

இந்தோனேசியப் பயணம் தொடர்பில் ஆஸ்திரேலியப் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்!

-

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese), தமது இந்தோனேசியப் பயணம் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகக் கூறியிருக்கிறார்.

புதிய பிரதமராகப் பதவியேற்ற 2 வாரங்களுக்குப் பிறகு அவர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

தென்கிழக்காசியாவில் தமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தவிருப்பதாகத் திரு. ஆல்பனீசி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஜக்கர்த்தாவில் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் (Joko Widodo) பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு. ஆல்பனீசி, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் Penny Wong, வர்த்தக அமைச்சர் Don Farrell ஆகியோர் இந்தோனேசியாவுக்குச் செல்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, திரு. ஆல்பனீசி மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது.

கடந்த மாதம் Quad நாடுகளுக்கு இடையே நடந்த சந்திப்பில் கலந்துகொள்ள அவர் தோக்கியோ சென்றிருந்தார்.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...