News தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகமாட்டேன் - கோட்டாபய

தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகமாட்டேன் – கோட்டாபய

-

தாம் மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தோல்வியடைந்த ஜனாதிபதியாக தாம் பதவி விலக போவதில்லை மக்கள் தமக்கு 5 வருடகால ஆணை வழங்கியுள்ளனர். எஞ்சிய காலத்திலும் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிப்பேன். நாட்டை சீரழித்துள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்தியுள்ளேன்.

ஏற்கனவே வழங்கிய வெற்றிகரமான சேவையை மீள ஸ்தாபிக்க விரும்புகிறேன் . 6 மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

இலங்கைக்கான உதவிக்காக இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல தரப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஓமானிடம் இருந்து நீண்ட கால எரிபொருள் ஒப்பந்தத்தை எதிர்பார்த்துள்ளேன்.

சலுகை கொடுப்பனவுகள் ரத்து செய்யப்பட வேண்டும். இராணுவத்துக்கும் பொது சேவைக்குமான ஒதுக்கத்தை குறைக்க முடியுமே தவிர ரத்து செய்ய முடியாது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருந்தால் முழுமையான அதிகாரம் காணப்பட வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் அதனை முழுமையாக ரத்து செய்து விட்டு வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Latest news

இலவச மின்சார கார் சார்ஜிங்கை நிறுத்தும் NRMA – புதிய சார்ஜிங் சிஸ்டம்மை அறிமுகப்படுத்த திட்டம்

மின்சார கார் சார்ஜிங் நிலையங்களின் பயன்பாட்டில், இலவச சேவைகள் நிறுத்தப்பட்டு, பணம் செலுத்தும் முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் பழைய வீட்டுத் தோட்டங்களை இடிக்கும் போராட்டங்கள் தணிந்தன

விக்டோரியா மாநிலத்தில் சில பழைய வீட்டுத் தொகுதிகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டுவதற்கான முன்மொழிவுகள் தொடர்பான விமர்சனங்கள் நீக்கப்பட்டுள்ளன.

உலகின் 2-வது பெரிய கோயில் திறப்பு

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ரொபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2011 ஆம்...

உள்நாட்டு குரல் முன்மொழிவுகளை செயல்படுத்த புதிய நாடாளுமன்றக் கூட்டு குழு

சுதேசி ஹடா வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் அதில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த புதிய நாடாளுமன்ற கூட்டுக் குழு நியமிக்கப்படும் என பிரதமர் அந்தோனி...

13 அடி நீள முதலையை சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் பினாலஸ் கவுன்டி பகுதி அமைந்துள்ளது.

பயணிகள் வசதிகளை மேம்படுத்த குவாண்டாஸிடம் இருந்து $80 மில்லியன்

Qantas Airlines நிறுவனம் உயர்தர வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கில் 80 மில்லியன் டொலர்களை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.