Newsஆஸ்திரேலியா சென்ற பயணிக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி!

ஆஸ்திரேலியா சென்ற பயணிக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி!

-

சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இடைநிலைப் பயணி ஒருவருக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் ஜூன் முதல் திகதி பார்சலோனிவில் புறப்பட்டு, மறுநாள் சாங்கி விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். அதே நாளன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குப் புறப்படும்வரை, விமான நிலையத்தின் இடைவழிப் பயணிகள் காத்திருப்புப் பகுதியில் இருந்திருக்கிறார்.

அவர் விமான நிலையத்தின் மற்ற பகுதிகளுக்குச் செல்லவில்லை. அவர் சிங்கப்பூருக்குள் நுழையவில்லை; சமூக அளவில் யாரையும் தொடர்புகொள்ளவில்லை.

அதனால் குரங்கம்மைத் தொற்று சமூக அளவில் பரவும் அபாயம் குறைவு என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட இரு விமானங்களில் பயணம் செய்தவர்களின் தொடர்புத் தடங்கள் கண்டறியப்பட்டன.

நெருங்கிய தொடர்பு இருந்ததாக எவரும் கண்டறியப்படவில்லை. அதனால் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் 13 பேர் 21 நாள்களுக்குத் தொலைபேசி மூலம் கண்காணிக்கப்படுவர் என்று அது தெரிவித்தது. அவர்களின் உடல்நிலை தினமும் தொலைபேசி அழைப்புகள்மூலம் கண்காணிக்கப்படும்.

Latest news

63,000 கார்களை திரும்பப் பெறும் BMW

ஏர்பேக் அமைப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, 60,000க்கும் மேற்பட்ட பிஎம்டபிள்யூ கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, பல BMW...

இத்தாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு $3000 அபராதம்

இத்தாலியில் உள்ள ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் கடவுச்சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு விஜயம் செய்யும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டை பயண இடங்களுக்கு எடுத்துச்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் தொடங்கும் State Nomination Migration

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய நிதியாண்டிற்கான State Nomination Migration திட்டம் (SNMP) இப்போது தொடங்கியுள்ளது. மேற்கத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த திட்ட வருடத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக $200...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

குயின்ஸ்லாந்து மக்களுக்கு ஒரு மோசடி அழைப்பு பற்றி அறிவிப்பு

குயின்ஸ்லாந்து காவல்துறை, காவல்துறை அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் அடையாளத் திருட்டுக் குழுக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி செய்பவர்கள் நம்பகமான அல்லது நன்கு அறியப்பட்ட...