News ஆஸ்திரேலியா சென்ற பயணிக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி!

ஆஸ்திரேலியா சென்ற பயணிக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி!

-

சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இடைநிலைப் பயணி ஒருவருக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் ஜூன் முதல் திகதி பார்சலோனிவில் புறப்பட்டு, மறுநாள் சாங்கி விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். அதே நாளன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குப் புறப்படும்வரை, விமான நிலையத்தின் இடைவழிப் பயணிகள் காத்திருப்புப் பகுதியில் இருந்திருக்கிறார்.

அவர் விமான நிலையத்தின் மற்ற பகுதிகளுக்குச் செல்லவில்லை. அவர் சிங்கப்பூருக்குள் நுழையவில்லை; சமூக அளவில் யாரையும் தொடர்புகொள்ளவில்லை.

அதனால் குரங்கம்மைத் தொற்று சமூக அளவில் பரவும் அபாயம் குறைவு என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட இரு விமானங்களில் பயணம் செய்தவர்களின் தொடர்புத் தடங்கள் கண்டறியப்பட்டன.

நெருங்கிய தொடர்பு இருந்ததாக எவரும் கண்டறியப்படவில்லை. அதனால் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் 13 பேர் 21 நாள்களுக்குத் தொலைபேசி மூலம் கண்காணிக்கப்படுவர் என்று அது தெரிவித்தது. அவர்களின் உடல்நிலை தினமும் தொலைபேசி அழைப்புகள்மூலம் கண்காணிக்கப்படும்.

Latest news

நாளை வேலை நிறுத்தம் செய்யவிருக்கும் 200 குவாண்டாஸ் விமானிகள்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என குவாண்டாஸ் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

4வது மாதத்திற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

இன்று நடைபெற்ற பெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, ரொக்க...

தொழிற்பயிற்சி கல்விக்கு $37.8 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு

தொழிற்பயிற்சி கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 37.8 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செய்தியாளர்களிடம்...

Yes23 பிரச்சாரத்திற்கு ஒரு எச்சரிக்கை

வாக்கெடுப்பில் முன்மொழிவுக்கு ஆதரவாக செயல்படும் Yes23 பிரச்சாரத்திற்கு தேசிய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின்...

கிழக்கு விக்டோரியாவில் அபாய நிலையில் உள்ள காட்டுத் தீ

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. பல புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை விரைவில்...

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு இளைஞர் சமூகத்திற்கு இல்லை என தெரியவந்துள்ளது

அவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் தொடர்பில் இந்த நாட்டில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என கணக்கெடுப்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.