Newsஆஸ்திரேலியா சென்ற பயணிக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி!

ஆஸ்திரேலியா சென்ற பயணிக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி!

-

சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இடைநிலைப் பயணி ஒருவருக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் ஜூன் முதல் திகதி பார்சலோனிவில் புறப்பட்டு, மறுநாள் சாங்கி விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். அதே நாளன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குப் புறப்படும்வரை, விமான நிலையத்தின் இடைவழிப் பயணிகள் காத்திருப்புப் பகுதியில் இருந்திருக்கிறார்.

அவர் விமான நிலையத்தின் மற்ற பகுதிகளுக்குச் செல்லவில்லை. அவர் சிங்கப்பூருக்குள் நுழையவில்லை; சமூக அளவில் யாரையும் தொடர்புகொள்ளவில்லை.

அதனால் குரங்கம்மைத் தொற்று சமூக அளவில் பரவும் அபாயம் குறைவு என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட இரு விமானங்களில் பயணம் செய்தவர்களின் தொடர்புத் தடங்கள் கண்டறியப்பட்டன.

நெருங்கிய தொடர்பு இருந்ததாக எவரும் கண்டறியப்படவில்லை. அதனால் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் 13 பேர் 21 நாள்களுக்குத் தொலைபேசி மூலம் கண்காணிக்கப்படுவர் என்று அது தெரிவித்தது. அவர்களின் உடல்நிலை தினமும் தொலைபேசி அழைப்புகள்மூலம் கண்காணிக்கப்படும்.

Latest news

கோவிட் தடுப்பூசி இல்லாமல் ஆஸ்திரேலியா மாநிலத்தில் வேலை செய்ய அனுமதி

COVID-19 தடுப்பூசி இல்லாமல் சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்ற அனுமதிக்கும் ஆஸ்திரேலியாவின் ஒரே மாநிலமாக தெற்கு ஆஸ்திரேலியா மாறும் என்று கூறப்படுகிறது. முன்மொழியப்பட்ட மாற்றங்களின் கீழ், சுகாதாரப் பணியாளர்கள்...

ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள் குறைவாக சாப்பிடுவதாக ஆய்வு

ஆஸ்திரேலியர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைவாகவும், சிப்ஸ், சிக்கன் மற்றும் சாக்லேட் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் புதிய தரவுகளின்படி, கடந்த ஆண்டு...

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா கண்டனம்

ஈரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை இடைமறித்ததாக இஸ்ரேல் கூறுகிறது. சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்ட இந்த தாக்குதல்கள், ஈரான் தனது எல்லையில் இருந்து...

பிளாஸ்டிக் பேக்கேஜிங் தொடர்பில் பல்பொருள் அங்காடிகளின் பங்களிப்பு குறைவாக இருப்பதாக அறிக்கை

பிளாஸ்டிக் பேக்கேஜிங் பயன்பாட்டைக் குறைப்பதில் பல்பொருள் அங்காடிகளின் பங்களிப்பு குறைவாக உள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. பல்பொருள் அங்காடிகளில் அதிகளவு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொதிகளுடன்...

பெர்த் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு மர்ம உடல்கள்

பெர்த்தில் உள்ள வீடொன்றில் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, கோல்ஃப் லிங்க்ஸ் டிரைவில் உள்ள வீடொன்றில் இந்த இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின்...

2030 இல் வாகனங்கள் பற்றிய போக்குவரத்துத் துறையின் கணிப்பு

2030 ஆம் ஆண்டுக்குள், புதிதாக வாங்கப்படும் கார்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானது மின்சார வாகனங்களாக இருக்கும் என்று மத்திய போக்குவரத்துத் துறை மதிப்பிடுகிறது. அதன்படி, 2030-ம்...