Newsநிலநடுக்கத்தில் சிக்கியவர்களை கண்டறியும் எலி

நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை கண்டறியும் எலி

-

தினசரி வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை பயிற்சி அளிக்கப்பட்ட எலிகள் மூலம் மீட்கும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்..

இந்தப் புதுமையான முயற்சியில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டாக்டர் டோன்னா கீன் இறங்கியுள்ளார். இந்த சோதனையின் போது சிறிய அளவிலான எலிகள் கட்டட இடிபாடுகளுக்குள் ஒரு சிறிய அளவிலான முதுகுப் பையுடன் (பேக்) அனுப்பப்படுகிறது. இந்த சிறிய முதுகுப் பையில் ஒலிவாங்கி (மைக்) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஒலிவாங்கியின் உதவியால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் நம்மால் பேச இயலும்.

இதுவரை 7 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த எலிகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதுகுப் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனை முயற்சியாக இந்த எலிகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இடிபாடுகளுக்குள் அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டது. ஒலி வாங்கி மட்டுமில்லாது சில உணரிகள் (சென்சார்ஸ்) கூட பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உண்மையில் நிலநடுக்கம் ஏற்படும் போது இந்த உணரிகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

இது குறித்து டாக்டர் டோன்னா கீன் கூறியதாவது, “ எலிகள் சுத்தமற்றவை என்பது நமது தவறான புரிதல். எலிகள் மனிதர்களுடன் எளிதில் பழகும் திறன் கொண்டவை. எலிகளால் இடிபாடுகளுக்குள் சுலபமாக செல்ல முடியும். நாங்கள் சோதனை முயற்சியை செய்து முடித்துள்ளோம். இருப்பினும், இந்த பயிற்சி பெற்ற எலிகள் உண்மையான நிலநடுக்க இடிபாடுகளுக்குள் அனுப்பி இன்னும் சோதிக்கப்படவில்லை. இடிபாடுகளுக்குள் செல்லும் எலியின் முதுகுப் பையில் உள்ள ஒலி வாங்கியின் உதவியால் எங்களால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் பேச முடியும்” என்றார்.

170 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவை நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் நாடான துருக்கிக்கு அனுப்பப்பட உள்ளதாக டாக்டர் டோன்னா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...