Newsநிலநடுக்கத்தில் சிக்கியவர்களை கண்டறியும் எலி

நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை கண்டறியும் எலி

-

தினசரி வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை பயிற்சி அளிக்கப்பட்ட எலிகள் மூலம் மீட்கும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்..

இந்தப் புதுமையான முயற்சியில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டாக்டர் டோன்னா கீன் இறங்கியுள்ளார். இந்த சோதனையின் போது சிறிய அளவிலான எலிகள் கட்டட இடிபாடுகளுக்குள் ஒரு சிறிய அளவிலான முதுகுப் பையுடன் (பேக்) அனுப்பப்படுகிறது. இந்த சிறிய முதுகுப் பையில் ஒலிவாங்கி (மைக்) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஒலிவாங்கியின் உதவியால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் நம்மால் பேச இயலும்.

இதுவரை 7 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த எலிகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதுகுப் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனை முயற்சியாக இந்த எலிகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இடிபாடுகளுக்குள் அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டது. ஒலி வாங்கி மட்டுமில்லாது சில உணரிகள் (சென்சார்ஸ்) கூட பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உண்மையில் நிலநடுக்கம் ஏற்படும் போது இந்த உணரிகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

இது குறித்து டாக்டர் டோன்னா கீன் கூறியதாவது, “ எலிகள் சுத்தமற்றவை என்பது நமது தவறான புரிதல். எலிகள் மனிதர்களுடன் எளிதில் பழகும் திறன் கொண்டவை. எலிகளால் இடிபாடுகளுக்குள் சுலபமாக செல்ல முடியும். நாங்கள் சோதனை முயற்சியை செய்து முடித்துள்ளோம். இருப்பினும், இந்த பயிற்சி பெற்ற எலிகள் உண்மையான நிலநடுக்க இடிபாடுகளுக்குள் அனுப்பி இன்னும் சோதிக்கப்படவில்லை. இடிபாடுகளுக்குள் செல்லும் எலியின் முதுகுப் பையில் உள்ள ஒலி வாங்கியின் உதவியால் எங்களால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் பேச முடியும்” என்றார்.

170 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவை நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் நாடான துருக்கிக்கு அனுப்பப்பட உள்ளதாக டாக்டர் டோன்னா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய தினம் குறித்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த உண்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை அதே நாளில் கொண்டாட வேண்டும் என்று 76% மக்களில் பெரும்பாலோர் விரும்புவதாக சமீபத்திய...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தம்

விக்டோரியாவில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள்...

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தம்

விக்டோரியாவில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள்...

மெல்பேர்ணில் ஒரு காவல் நிலையம் அருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர் கைது

ஜனவரி 3 ஆம் திகதி, மெல்பேர்ணில் உள்ள ஒரு காவல் நிலையம் அருகே நள்ளிரவு 12 மணியளவில் 16 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். துப்பாக்கிச் சூடு...