Newsநிலநடுக்கத்தில் சிக்கியவர்களை கண்டறியும் எலி

நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை கண்டறியும் எலி

-

தினசரி வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை பயிற்சி அளிக்கப்பட்ட எலிகள் மூலம் மீட்கும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்..

இந்தப் புதுமையான முயற்சியில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டாக்டர் டோன்னா கீன் இறங்கியுள்ளார். இந்த சோதனையின் போது சிறிய அளவிலான எலிகள் கட்டட இடிபாடுகளுக்குள் ஒரு சிறிய அளவிலான முதுகுப் பையுடன் (பேக்) அனுப்பப்படுகிறது. இந்த சிறிய முதுகுப் பையில் ஒலிவாங்கி (மைக்) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஒலிவாங்கியின் உதவியால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் நம்மால் பேச இயலும்.

இதுவரை 7 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த எலிகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதுகுப் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனை முயற்சியாக இந்த எலிகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இடிபாடுகளுக்குள் அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டது. ஒலி வாங்கி மட்டுமில்லாது சில உணரிகள் (சென்சார்ஸ்) கூட பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உண்மையில் நிலநடுக்கம் ஏற்படும் போது இந்த உணரிகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

இது குறித்து டாக்டர் டோன்னா கீன் கூறியதாவது, “ எலிகள் சுத்தமற்றவை என்பது நமது தவறான புரிதல். எலிகள் மனிதர்களுடன் எளிதில் பழகும் திறன் கொண்டவை. எலிகளால் இடிபாடுகளுக்குள் சுலபமாக செல்ல முடியும். நாங்கள் சோதனை முயற்சியை செய்து முடித்துள்ளோம். இருப்பினும், இந்த பயிற்சி பெற்ற எலிகள் உண்மையான நிலநடுக்க இடிபாடுகளுக்குள் அனுப்பி இன்னும் சோதிக்கப்படவில்லை. இடிபாடுகளுக்குள் செல்லும் எலியின் முதுகுப் பையில் உள்ள ஒலி வாங்கியின் உதவியால் எங்களால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் பேச முடியும்” என்றார்.

170 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவை நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் நாடான துருக்கிக்கு அனுப்பப்பட உள்ளதாக டாக்டர் டோன்னா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கப்படும் மதுபானம் மீதான வரிகள்

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் மதுபானங்கள் மற்றும் முன் கலந்த பானங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஏனென்றால், பணவீக்கத்திற்கு ஏற்ப அரசாங்கம் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் மதுபான வரியை அதிகரிக்கிறது...

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை – 1200 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 1200 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாகவும் Bloomberg செய்தி...

இன்று முதல் Economy வகுப்பு பயணிகளுக்கு பல சலுகைகளை வழங்கும் Qantas

Qantas நிறுவனம் இன்று முதல் புதிய Economy Plus திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் Qantas Economy வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Economy Plus திட்டம் பயணிகளுக்கு...

ஜப்பானில் ski lift-இல் சிக்கி ஆஸ்திரேலிய பெண் உயிரிழப்பு

ஜப்பானின் நாகானோ மாகாணத்தில் உள்ள ஒரு பிரபலமான ski ரிசார்ட்டில் ski lift-இல் சிக்கி 22 வயது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். "பையில் இணைக்கப்பட்டிருந்த இடுப்புப்...

Logan பகுதியில் பல வாகனங்கள் மோதி விபத்து

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தின் Grater Brisbane பகுதியில் உள்ள Logan நகருக்கு அருகில் பல வாகனங்கள் மோதிக்கொண்டதால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Loganholme பசிபிக் மோட்டார்வேயில்...

கடுமையான வெப்பம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு

பெர்த்தின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நெருங்கி வருவதால், பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Scarborough, Trigg, Doubleview,...