Newsநிலநடுக்கத்தில் சிக்கியவர்களை கண்டறியும் எலி

நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை கண்டறியும் எலி

-

தினசரி வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை பயிற்சி அளிக்கப்பட்ட எலிகள் மூலம் மீட்கும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்..

இந்தப் புதுமையான முயற்சியில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டாக்டர் டோன்னா கீன் இறங்கியுள்ளார். இந்த சோதனையின் போது சிறிய அளவிலான எலிகள் கட்டட இடிபாடுகளுக்குள் ஒரு சிறிய அளவிலான முதுகுப் பையுடன் (பேக்) அனுப்பப்படுகிறது. இந்த சிறிய முதுகுப் பையில் ஒலிவாங்கி (மைக்) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஒலிவாங்கியின் உதவியால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் நம்மால் பேச இயலும்.

இதுவரை 7 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த எலிகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதுகுப் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனை முயற்சியாக இந்த எலிகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இடிபாடுகளுக்குள் அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டது. ஒலி வாங்கி மட்டுமில்லாது சில உணரிகள் (சென்சார்ஸ்) கூட பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உண்மையில் நிலநடுக்கம் ஏற்படும் போது இந்த உணரிகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

இது குறித்து டாக்டர் டோன்னா கீன் கூறியதாவது, “ எலிகள் சுத்தமற்றவை என்பது நமது தவறான புரிதல். எலிகள் மனிதர்களுடன் எளிதில் பழகும் திறன் கொண்டவை. எலிகளால் இடிபாடுகளுக்குள் சுலபமாக செல்ல முடியும். நாங்கள் சோதனை முயற்சியை செய்து முடித்துள்ளோம். இருப்பினும், இந்த பயிற்சி பெற்ற எலிகள் உண்மையான நிலநடுக்க இடிபாடுகளுக்குள் அனுப்பி இன்னும் சோதிக்கப்படவில்லை. இடிபாடுகளுக்குள் செல்லும் எலியின் முதுகுப் பையில் உள்ள ஒலி வாங்கியின் உதவியால் எங்களால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் பேச முடியும்” என்றார்.

170 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவை நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் நாடான துருக்கிக்கு அனுப்பப்பட உள்ளதாக டாக்டர் டோன்னா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீட்க சிறப்பு விமானம்

நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நடந்து...

கான்பெர்ரா மருத்துவமனையில் சக ஊழியரால் துன்புறுத்தப்பட்ட மற்றொரு ஊழியர்

கான்பெர்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர், அதே மருத்துவமனையில் பெண் ஊழியரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Santhoshreddy Khambam என்ற 31 வயது நபர், மருத்துவமனையின் தொழில்நுட்ப அமைப்பைப்...