Newsநிலநடுக்கத்தில் சிக்கியவர்களை கண்டறியும் எலி

நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை கண்டறியும் எலி

-

தினசரி வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை பயிற்சி அளிக்கப்பட்ட எலிகள் மூலம் மீட்கும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்..

இந்தப் புதுமையான முயற்சியில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டாக்டர் டோன்னா கீன் இறங்கியுள்ளார். இந்த சோதனையின் போது சிறிய அளவிலான எலிகள் கட்டட இடிபாடுகளுக்குள் ஒரு சிறிய அளவிலான முதுகுப் பையுடன் (பேக்) அனுப்பப்படுகிறது. இந்த சிறிய முதுகுப் பையில் ஒலிவாங்கி (மைக்) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஒலிவாங்கியின் உதவியால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் நம்மால் பேச இயலும்.

இதுவரை 7 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த எலிகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதுகுப் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனை முயற்சியாக இந்த எலிகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இடிபாடுகளுக்குள் அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டது. ஒலி வாங்கி மட்டுமில்லாது சில உணரிகள் (சென்சார்ஸ்) கூட பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உண்மையில் நிலநடுக்கம் ஏற்படும் போது இந்த உணரிகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

இது குறித்து டாக்டர் டோன்னா கீன் கூறியதாவது, “ எலிகள் சுத்தமற்றவை என்பது நமது தவறான புரிதல். எலிகள் மனிதர்களுடன் எளிதில் பழகும் திறன் கொண்டவை. எலிகளால் இடிபாடுகளுக்குள் சுலபமாக செல்ல முடியும். நாங்கள் சோதனை முயற்சியை செய்து முடித்துள்ளோம். இருப்பினும், இந்த பயிற்சி பெற்ற எலிகள் உண்மையான நிலநடுக்க இடிபாடுகளுக்குள் அனுப்பி இன்னும் சோதிக்கப்படவில்லை. இடிபாடுகளுக்குள் செல்லும் எலியின் முதுகுப் பையில் உள்ள ஒலி வாங்கியின் உதவியால் எங்களால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் பேச முடியும்” என்றார்.

170 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவை நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் நாடான துருக்கிக்கு அனுப்பப்பட உள்ளதாக டாக்டர் டோன்னா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதங்கள் தொடர்ந்து சரிவதற்கான காரணங்கள்

ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகையைப் பராமரிக்க போதுமான குழந்தைகள் இல்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2021 க்கு இடையில் 50–54 வயதுடைய குழந்தை இல்லாத பெண்களின்...

புதுமை பெறுகிறது விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் அதிகரித்து வரும் குற்ற விகிதத்தை எதிர்த்துப் போராட விக்டோரியா காவல்துறை புதிய திட்டங்களையும் நடவடிக்கைகளையும் முன்மொழிந்துள்ளது. விக்டோரியா காவல்துறை 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றங்களைச்...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கார் திருட்டுகள் – கடுமையாகும் சட்டங்கள்

விக்டோரியாவில் கார் திருட்டு விகிதம் இந்த ஆண்டு 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காப்பீட்டு முகவர்கள் ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கும் ஒரு கார் திருட்டு...

ஆன்லைனில் கசிந்த அல்பானீஸ், டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ், எதிர்க்கட்சித் தலைவர் சூசன் லே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. ஒரு...

மலேசியாவில் குழந்தைகள் மத்தியில் பரவும் நோய்

மலேசியாவில் வேகமாக பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா (influenza) தொற்றுநோய் காரணமாக 6000 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கடந்த வாரத்தில் 97...

விர்ஜின் ஆஸ்திரேலியா பயணிகளுக்கான புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிறுவனமான விர்ஜின் ஆஸ்திரேலியா, பயணிகளுக்கான புதிய சாமான்கள் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, Economy வகுப்பு பயணிகள் அதிக சாமான்களை எடுத்துச் செல்ல முடியும்,...