Newsவிளைவு விபரீதமாகும் - ஆஸ்திரேலியாவுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கை

விளைவு விபரீதமாகும் – ஆஸ்திரேலியாவுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியா கவனமாக நடந்துகொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய வேவு விமானத்தைச் சீன விமானம் அபாயகரமான முறையில் குறுக்கிட்டதாக ஆஸ்திரேலியா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து சீனா அந்த எச்சரிக்கையை விடுத்தது.

பெய்ச்சிங்கும் கென்பராவும் ஒன்றை ஒன்று கடிந்துகொள்கின்றன. தென் சீனக் கடலில் தனது உளவு விமானம் பறப்பது இயல்பான ஒன்று என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஆனால் தென் சீனக் கடல் தனது கட்டுப்பாட்டின்கீழ் வரும் வட்டாரம் என்று சீனா குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவும் அமெரிக்க நட்பு நாடுகளும் சீனாவின் அந்த நிலையை ஏற்கவில்லை. தென் சீனக் கடல் யார் வேண்டுமானாலும் போய்வரக்கூடிய சுதந்திரப் பகுதி என்பது அமெரிக்கத் தரப்பின் வாதமாகும்.

சுதந்திரமாகப் பயணம் செய்வது என்ற பெயரில் தனது தன்னாட்சியிலும் பாதுகாப்பிலும் தலையிடக் கூடாது என்று சீனா அதற்குப் பதில் கூறியுள்ளது.

Latest news

63,000 கார்களை திரும்பப் பெறும் BMW

ஏர்பேக் அமைப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, 60,000க்கும் மேற்பட்ட பிஎம்டபிள்யூ கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, பல BMW...

இத்தாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு $3000 அபராதம்

இத்தாலியில் உள்ள ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் கடவுச்சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு விஜயம் செய்யும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டை பயண இடங்களுக்கு எடுத்துச்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் தொடங்கும் State Nomination Migration

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய நிதியாண்டிற்கான State Nomination Migration திட்டம் (SNMP) இப்போது தொடங்கியுள்ளது. மேற்கத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த திட்ட வருடத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக $200...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

குயின்ஸ்லாந்து மக்களுக்கு ஒரு மோசடி அழைப்பு பற்றி அறிவிப்பு

குயின்ஸ்லாந்து காவல்துறை, காவல்துறை அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் அடையாளத் திருட்டுக் குழுக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி செய்பவர்கள் நம்பகமான அல்லது நன்கு அறியப்பட்ட...