Newsமுதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

முதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

-

ஆஸ்திரேலிய, சீனத் தற்காப்பு அமைச்சர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கிய முன் னேற்றப்படி என வருணிக்கப் படுகிறது.

“வெளிப்படையான முழுமையான கருத்து பரிமாற்றத்திற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆஸ்திரேலியாவின் அக்கறைக்குரிய பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி யிருந்தேன்,” என்று ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்தார்.

இருதரப்புக்கும் இடையே நடை பெற்ற சந்திப்பை அவர் நேற்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா மாநாட்டையொட்டி மார்ல்சும் சீன தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்கியும் சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் கலந்துரையாடினர். தற்போதையக் காலக்கட்டத்தில் வெளிப்படையாக உரையாடுவது முக்கியம் என்று துணைப் பிரதமரு மான திரு மார்ல்ஸ் குறிப்பிட்டார்.

“ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சிக்கலானது. அதற்கு நேரில் சந்தித்து பேசுவதே நல்லது” என்றும் அவர் சொன்னார். ஆனால் இந்தச் சந்திப்பு பற்றி சீன அரசாங்கமோ ஜெனரல் வெய்யோ உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

கொவிட்-19 கிருமி உருவான இடத்தைக் கண்டுபிடிக்க தன்னிச் சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தினார்.

இது, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவில் ‘5ஜி’ கட்டமைப்பை உருவாக்க சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவெய்யுக்கு தடை விதிக்கப் பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசம் அடைந்தது.

Latest news

கணையப் புற்றுநோயைக் கண்டறிய புதிய இரத்தப் பரிசோதனை

ஆஸ்திரேலிய கணைய புற்றுநோய் அறக்கட்டளை (PanKind) கணைய புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான புதிய இரத்த பரிசோதனை இப்போது ஆஸ்திரேலியாவில் கிடைக்கிறது என்று அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, இந்த இரத்தப்...

ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை சர்வதேச வர்த்தக விலை குறியீடுகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. அதன்படி, கடந்த...

மனதையும் கணினியையும் இணைக்கும் ஒரு இடைமுகத்தை உருவாக்கும் Neuralink

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான அமெரிக்க நிறுவனமான Neuralink, அதன் சமீபத்திய ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை கணினியையும் மனித மூளையையும் இணைக்கக்கூடிய ஒரு...

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...