Newsமுதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

முதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

-

ஆஸ்திரேலிய, சீனத் தற்காப்பு அமைச்சர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கிய முன் னேற்றப்படி என வருணிக்கப் படுகிறது.

“வெளிப்படையான முழுமையான கருத்து பரிமாற்றத்திற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆஸ்திரேலியாவின் அக்கறைக்குரிய பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி யிருந்தேன்,” என்று ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்தார்.

இருதரப்புக்கும் இடையே நடை பெற்ற சந்திப்பை அவர் நேற்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா மாநாட்டையொட்டி மார்ல்சும் சீன தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்கியும் சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் கலந்துரையாடினர். தற்போதையக் காலக்கட்டத்தில் வெளிப்படையாக உரையாடுவது முக்கியம் என்று துணைப் பிரதமரு மான திரு மார்ல்ஸ் குறிப்பிட்டார்.

“ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சிக்கலானது. அதற்கு நேரில் சந்தித்து பேசுவதே நல்லது” என்றும் அவர் சொன்னார். ஆனால் இந்தச் சந்திப்பு பற்றி சீன அரசாங்கமோ ஜெனரல் வெய்யோ உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

கொவிட்-19 கிருமி உருவான இடத்தைக் கண்டுபிடிக்க தன்னிச் சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தினார்.

இது, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவில் ‘5ஜி’ கட்டமைப்பை உருவாக்க சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவெய்யுக்கு தடை விதிக்கப் பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசம் அடைந்தது.

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

உயிருள்ள இரால்களை பரிமாறும் சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள ஒரு கொரிய கடல் உணவு உணவகம் உயிருள்ள நண்டுகளை சாப்பிடும் சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது. பச்சையான கடல் உணவை வழங்கும் இந்த பிரபலமான...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...