News2022 ம் ஆண்டில் கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் உயிரிழக்கலாம்

2022 ம் ஆண்டில் கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் உயிரிழக்கலாம்

-

கொரோனா பெரும் தொற்றால் 2022 ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் வரை உயிரிழக்க நேரிடலாம் என மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதே சமயம் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதற்கு மேலும் அதிகரிக்கலாம் என கூறுகின்றனர்.

தற்போது நாட்டில் செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகரின் அளவு போதுமானதாக இல்லை. அதனால் அவற்றை அதிகரிக்க வேண்டும் என Burnet Institute பேராசிரியர் மார்க்கரெட் ஹெல்லர்ட் விக்டோரியா மற்றும் பெடரல் அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். தனது கணிப்பின்படி நாட்டில் நடப்பு ஆண்டில் 10,000 முதல் 15,000 வரை உயிரிழக்க நேரிடலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆஸ்திரேயாவில் நோய் பரவலை 20 சதவீதம் குறைத்தாலே 2000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்படலாம். கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புக்களை தடுக்க முகக்கவசம் அணிவதை மீண்டும் அறிமுகம் செய்தல், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், வைரஸ் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தலை கண்காணித்தல் ஆகியவையே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் மார்கரெட் எச்சரித்துள்ளார்.

பேராசிரியர் Jodie McVernon தனது அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் போதிய அளவிற்கு தடுப்பூசிகளை கையிருப்பு வைக்காவிட்டால் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா போன்று ஆஸ்திரேலியாவிலும் திடீரென கொரோனா பரவல் வேகமெடுத்து, அதிக உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாய நிலை உருவாகலாம் என எச்சரித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...