News2022 ம் ஆண்டில் கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் உயிரிழக்கலாம்

2022 ம் ஆண்டில் கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் உயிரிழக்கலாம்

-

கொரோனா பெரும் தொற்றால் 2022 ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் வரை உயிரிழக்க நேரிடலாம் என மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதே சமயம் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதற்கு மேலும் அதிகரிக்கலாம் என கூறுகின்றனர்.

தற்போது நாட்டில் செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகரின் அளவு போதுமானதாக இல்லை. அதனால் அவற்றை அதிகரிக்க வேண்டும் என Burnet Institute பேராசிரியர் மார்க்கரெட் ஹெல்லர்ட் விக்டோரியா மற்றும் பெடரல் அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். தனது கணிப்பின்படி நாட்டில் நடப்பு ஆண்டில் 10,000 முதல் 15,000 வரை உயிரிழக்க நேரிடலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆஸ்திரேயாவில் நோய் பரவலை 20 சதவீதம் குறைத்தாலே 2000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்படலாம். கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புக்களை தடுக்க முகக்கவசம் அணிவதை மீண்டும் அறிமுகம் செய்தல், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், வைரஸ் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தலை கண்காணித்தல் ஆகியவையே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் மார்கரெட் எச்சரித்துள்ளார்.

பேராசிரியர் Jodie McVernon தனது அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் போதிய அளவிற்கு தடுப்பூசிகளை கையிருப்பு வைக்காவிட்டால் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா போன்று ஆஸ்திரேலியாவிலும் திடீரென கொரோனா பரவல் வேகமெடுத்து, அதிக உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாய நிலை உருவாகலாம் என எச்சரித்துள்ளார்.

Latest news

மன்னிப்பு கேட்டுள்ள விக்டோரியாவின் மூத்த காவல்துறை அதிகாரி

விக்டோரியாவில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, தனிப்பட்ட பயணத்திற்காக போலீஸ் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். தலைமை ஆணையர் Mike Bush மன்னிப்பு கேட்டார். இருப்பினும், டாஸ்மேனியாவில்...

அவசரமாக தரையிறங்கிய அந்தோணி அல்பானீஸ் சென்ற விமானம்

ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை அதிகாரி காயமடைந்ததை அடுத்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம்,...

ஆஸ்திரேலியா சீனா இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்கள்

தென் சீனக் கடலில் பதட்டமான விமானப்படை மோதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய இராணுவ விமானம் அருகே சீன...

குயின்ஸ்லாந்து செவிலியர்களுக்கு 11% சம்பள உயர்வு

குயின்ஸ்லாந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் புதிய $1.8 பில்லியன் ஊதிய ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பேரம் பேசும் ஒப்பந்தத்தில் பங்கேற்ற 83.8% செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் ஆதரவாக...

கான்பெராவில் மாற்றமடையும் Liquor Transport சட்டங்கள்

கான்பெராவில் வீடுகளுக்கு மதுபான விநியோகத்தை கட்டுப்படுத்தும் மசோதாவை ACT அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை...

அவசரமாக தரையிறங்கிய அந்தோணி அல்பானீஸ் சென்ற விமானம்

ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை அதிகாரி காயமடைந்ததை அடுத்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம்,...