Newsஆஸ்திரேலியாவில் 11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

ஆஸ்திரேலியாவில் 11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

-

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றின் பாதையில் வைத்து 11 வயது சிறுமி மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை ஃபிராங்க்ஸ்டன் ஷாப்பிங் சென்டரில் ஒரு பாதையில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தியால் குத்தப்பட்ட 11 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 12 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

நள்ளிரவு 12.15 மணியளவில் பேசைட் சென்டர் ஷாப்பிங் மாலுக்கு அருகிலுள்ள கேலரி லேனில் மூன்று இளைஞர்கள் சிறுமியை அணுகியுள்ளனர். இதன்போது கையடக்க தொலைபேசி மற்றும் தனிப்பட்ட பொருட்களை ஒப்படைக்குமாறு கோரினர்,

இததனையடுத்து கூரிய ஆயுதத்தால் சிறுமியை பலமுறை குத்தியுள்ளனர். சிறுமி உடலில் காயங்களுடன் ஃபிராங்க்ஸ்டன் வைத்தியசாலையில் துணை வைத்தியர்கள் அனுமதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த சிறுதி ரோயல் குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விரைந்து செயற்பட்ட போக்குவரத்து பொலிஸார் குறித்த சிறுவர்களை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து 14 வயது சிறுவன் மற்றும் 12 வயது சிறுமி மீது ஆயுதம் ஏந்திய கொள்ளை மற்றும் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பின்னர் குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...