Newsஆஸ்திரேலியாவில் 11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

ஆஸ்திரேலியாவில் 11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

-

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றின் பாதையில் வைத்து 11 வயது சிறுமி மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை ஃபிராங்க்ஸ்டன் ஷாப்பிங் சென்டரில் ஒரு பாதையில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தியால் குத்தப்பட்ட 11 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 12 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

நள்ளிரவு 12.15 மணியளவில் பேசைட் சென்டர் ஷாப்பிங் மாலுக்கு அருகிலுள்ள கேலரி லேனில் மூன்று இளைஞர்கள் சிறுமியை அணுகியுள்ளனர். இதன்போது கையடக்க தொலைபேசி மற்றும் தனிப்பட்ட பொருட்களை ஒப்படைக்குமாறு கோரினர்,

இததனையடுத்து கூரிய ஆயுதத்தால் சிறுமியை பலமுறை குத்தியுள்ளனர். சிறுமி உடலில் காயங்களுடன் ஃபிராங்க்ஸ்டன் வைத்தியசாலையில் துணை வைத்தியர்கள் அனுமதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த சிறுதி ரோயல் குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விரைந்து செயற்பட்ட போக்குவரத்து பொலிஸார் குறித்த சிறுவர்களை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து 14 வயது சிறுவன் மற்றும் 12 வயது சிறுமி மீது ஆயுதம் ஏந்திய கொள்ளை மற்றும் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பின்னர் குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதி விபத்து

சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9...