Newsஆஸ்திரேலியாவில் 11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

ஆஸ்திரேலியாவில் 11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

-

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றின் பாதையில் வைத்து 11 வயது சிறுமி மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை ஃபிராங்க்ஸ்டன் ஷாப்பிங் சென்டரில் ஒரு பாதையில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தியால் குத்தப்பட்ட 11 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 12 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

நள்ளிரவு 12.15 மணியளவில் பேசைட் சென்டர் ஷாப்பிங் மாலுக்கு அருகிலுள்ள கேலரி லேனில் மூன்று இளைஞர்கள் சிறுமியை அணுகியுள்ளனர். இதன்போது கையடக்க தொலைபேசி மற்றும் தனிப்பட்ட பொருட்களை ஒப்படைக்குமாறு கோரினர்,

இததனையடுத்து கூரிய ஆயுதத்தால் சிறுமியை பலமுறை குத்தியுள்ளனர். சிறுமி உடலில் காயங்களுடன் ஃபிராங்க்ஸ்டன் வைத்தியசாலையில் துணை வைத்தியர்கள் அனுமதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த சிறுதி ரோயல் குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விரைந்து செயற்பட்ட போக்குவரத்து பொலிஸார் குறித்த சிறுவர்களை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து 14 வயது சிறுவன் மற்றும் 12 வயது சிறுமி மீது ஆயுதம் ஏந்திய கொள்ளை மற்றும் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பின்னர் குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை கொல்லும் கொடிய பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் பள்ளிக் குழந்தைகளிடையே 'Strep A' பாக்டீரியா பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கிம்பர்லி பகுதியில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாக்டீரியா இதய...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை கொல்லும் கொடிய பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் பள்ளிக் குழந்தைகளிடையே 'Strep A' பாக்டீரியா பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கிம்பர்லி பகுதியில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாக்டீரியா இதய...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்ட கடுமையான விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான சிறப்பு விதிகளை...