Newsசீன ஊடகங்களின் கடும் தாக்குதல் - உச்சக்கட்ட கோபத்தில் ஆஸ்திரேலிய பிரதமர்

சீன ஊடகங்களின் கடும் தாக்குதல் – உச்சக்கட்ட கோபத்தில் ஆஸ்திரேலிய பிரதமர்

-

சீன ஊடகங்கள் கடும் தாக்குதலை முன்னெடுத்துள்ளமையினால் ஆஸ்திரேலிய பிரதமர் கடும் கோமடைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அறியாமையில் உள்ளார் எனவும் சீனாவும் அவுஸ்திரேலியாவும் தங்கள் உறவுகளை சீர்செய்வதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன எனவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சில நாட்களிற்கு முன்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை சீனா தாய்வான் பதற்றத்துடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டிருந்தார்.

உக்ரைனை கைப்பற்றும் விடயத்தில் விளாடிமிர் புட்டின் தோல்வியடைந்துள்ளமை இறைமை உள்ள நாட்டின் மீது படைபலத்தை பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் எதிர்ப்பை சந்திக்கும் என்பதை இது புலப்படுத்தியுள்ளது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்திருந்தார்.

ஆஸ்திரேலிய பிரதமரின் இந்த கருத்தினை கடுமையாக விமர்சித்துள்ள சீனா டெய்லி அவுஸ்திரேலிய பிரதமரின் கருத்து இராஜதந்திர அணுகுமுறைகள் அரசியல் யதார்த்தங்கள் மீதான அவரது திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் உக்ரைன் குறித்த சீனாவின் நிலைப்பாட்டை அறியாத அளவிற்கு தவறான தகவல்களை கொண்டவர் என்பதை நம்புவது கடினம் எனவும் குறிப்பிட்டுள்ள சீனாவின் நாளிதழ் சீனா தனது நிலைப்பாட்டை பல தடவை வெளிப்படுத்தியுள்ளது தாய்வானின் நிலையை அறியாத அளவிற்கு அவர் அறியாதவராகயிருக்கலாம் என ஆசிரிய தலையங்களித்தில் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

தொழிற்கட்சி சீனாவை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் கொள்கையை பறைசாற்றிக்கொண்டு அதன் அணியில் ஆர்வத்துடன் இணைந்துள்ளது என சீன நாளிதழ் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யாவின் மூலோபாய தவறுகளில் இருந்து சீனா பாடம் கற்கவேண்டும் என தெரிவித்துள்ளதை தொடர்ந்து சீனாவின் வெளிவிவகார பேச்சாளரும் அவுஸ்திரேலிய பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

இது பொறுப்பற்ற கருத்து உக்ரைன் விவகாரம் தொடர்பில் எங்களின் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் தெரிவித்துவந்துள்ளோம்,தாய்வான் உக்ரைனில்லை ஒப்பிடமுடியாது என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...