News சீன ஊடகங்களின் கடும் தாக்குதல் - உச்சக்கட்ட கோபத்தில் ஆஸ்திரேலிய பிரதமர்

சீன ஊடகங்களின் கடும் தாக்குதல் – உச்சக்கட்ட கோபத்தில் ஆஸ்திரேலிய பிரதமர்

-

சீன ஊடகங்கள் கடும் தாக்குதலை முன்னெடுத்துள்ளமையினால் ஆஸ்திரேலிய பிரதமர் கடும் கோமடைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அறியாமையில் உள்ளார் எனவும் சீனாவும் அவுஸ்திரேலியாவும் தங்கள் உறவுகளை சீர்செய்வதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன எனவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சில நாட்களிற்கு முன்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை சீனா தாய்வான் பதற்றத்துடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டிருந்தார்.

உக்ரைனை கைப்பற்றும் விடயத்தில் விளாடிமிர் புட்டின் தோல்வியடைந்துள்ளமை இறைமை உள்ள நாட்டின் மீது படைபலத்தை பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் எதிர்ப்பை சந்திக்கும் என்பதை இது புலப்படுத்தியுள்ளது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்திருந்தார்.

ஆஸ்திரேலிய பிரதமரின் இந்த கருத்தினை கடுமையாக விமர்சித்துள்ள சீனா டெய்லி அவுஸ்திரேலிய பிரதமரின் கருத்து இராஜதந்திர அணுகுமுறைகள் அரசியல் யதார்த்தங்கள் மீதான அவரது திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் உக்ரைன் குறித்த சீனாவின் நிலைப்பாட்டை அறியாத அளவிற்கு தவறான தகவல்களை கொண்டவர் என்பதை நம்புவது கடினம் எனவும் குறிப்பிட்டுள்ள சீனாவின் நாளிதழ் சீனா தனது நிலைப்பாட்டை பல தடவை வெளிப்படுத்தியுள்ளது தாய்வானின் நிலையை அறியாத அளவிற்கு அவர் அறியாதவராகயிருக்கலாம் என ஆசிரிய தலையங்களித்தில் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

தொழிற்கட்சி சீனாவை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் கொள்கையை பறைசாற்றிக்கொண்டு அதன் அணியில் ஆர்வத்துடன் இணைந்துள்ளது என சீன நாளிதழ் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யாவின் மூலோபாய தவறுகளில் இருந்து சீனா பாடம் கற்கவேண்டும் என தெரிவித்துள்ளதை தொடர்ந்து சீனாவின் வெளிவிவகார பேச்சாளரும் அவுஸ்திரேலிய பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

இது பொறுப்பற்ற கருத்து உக்ரைன் விவகாரம் தொடர்பில் எங்களின் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் தெரிவித்துவந்துள்ளோம்,தாய்வான் உக்ரைனில்லை ஒப்பிடமுடியாது என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.