Newsஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 45 இலங்கையர்களின் பரிதாப நிலை!

ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 45 இலங்கையர்களின் பரிதாப நிலை!

-

ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பினூடாக சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதனுடன், 20 வயதுக்கு கீழ்பட்ட 25 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் தற்போது குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இதேவேளை வெள்ளவாய எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் விதிமுறைகளை மீறி செயற்பட்டார்கள் என தெரிவித்து 13 பேர் கைது செய்யபபட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக பதற்றத்தை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டார்கள் என தெரிவித்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

விக்டோரியாவை மீட்டெடுக்க $158 மில்லியன் ஒதுக்கீடு

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட விக்டோரியன் சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கூடுதலாக $158 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலன்...

பல குழந்தைகள் விளையாட்டு பொருட்களில் புற்றுநோய் ஏற்படுத்தும் Asbestos

ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக விற்கப்படும் பல குழந்தைகள் விளையாட்டு பொருட்களில் ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ் இருப்பது சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, Wonder Co பிராண்டான Sensory...

புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு சமூகத்திற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து நிரந்தர வதிவிடம்

கடல் மட்ட உயர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளான Tuvalu-இன் முதல் குடியிருப்பாளர்களை ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் கீழ் குடியேற்ற அரசாங்கம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது. Tuvalu மற்றும்...

வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கான உரிம விதிகளை கடுமையாக்கும் NSW

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கு முன்னர் தளர்வான முறை நீக்கப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. 16 வெளிநாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் தங்கள்...

போலியான நடிப்பு வாய்ப்புகள் மூலம் இளைஞர்களை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு

Disneyன் நடிகை முகவராக நடித்து இளம் நடிகர்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு இன்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் உள்ளிட்ட...

புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு சமூகத்திற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து நிரந்தர வதிவிடம்

கடல் மட்ட உயர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளான Tuvalu-இன் முதல் குடியிருப்பாளர்களை ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் கீழ் குடியேற்ற அரசாங்கம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது. Tuvalu மற்றும்...