ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தில் சிக்கிய காருக்குள் இருந்த 72 வயது மூதாட்டியை பொலிஸார் பத்திரமாக மீட்டனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் காரை விட்டு வெளியேற முடியாமல் தவித்த அந்த மூதாட்டி அவசர சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
45 நிமிடங்கள் காரில் பரிதவித்த அந்த மூதாட்டியை பொலிஸார் பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.