Newsகோட்டா குழுவினரை பாதுகாக்க சிறப்பு படையணிகள் வரவழைப்பு

கோட்டா குழுவினரை பாதுகாக்க சிறப்பு படையணிகள் வரவழைப்பு

-

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள கோட்டாபய ராஜபக்ச குழுவினருக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியின் போது மக்களின் எதிர்ப்புக்களை முறியடிக்க, கொழும்புக்கு சிறப்பு படையணிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொதுமக்களின் எதிர்ப்பை நாளை சனிக்கிழமை (09.07.2022) எதிர்கொள்ளும் வகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக அரச தலைவரின் மாளிகையைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பிரதமர் ரணில் மற்றும் மகிந்த தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெறும் 1,500 பேர் கூட இந்த பாதுகாப்புப் படைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஏற்கனவே 4,000-க்கும் அதிகமான இராணுவத்தினர் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து 3,000 காவல்துறையினர், கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக குடிமக்கள் பாதுகாப்பு படைப்பிரிவைச் (Civil defense force) சேர்ந்த சுமார் 1,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

படை முகாமிற்கு பாதுகாப்பு படையினரை நிலை நிறுத்தும்போது, முப்படையில் இருந்து இருவர் வீதம் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் ஈடுபடுத்தப்படுவார். குறைந்தபட்சம் 100 காவல்துறையினரும் 200 இராணுவத்தினரும் சிறப்பு நிலையங்களில் நிறுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

குறைந்து வரும் மின்சார வாகனங்களின் பேட்டரி வரம்பு

ஆஸ்திரேலியாவின் அதிகம் விற்பனையாகும் சில மின்சார வாகனங்கள், அவற்றின் பேட்டரி வரம்பு குறித்த தவறான தகவல்களுடன் விளம்பரப்படுத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Australian Automobile Association (AAA)...

தேசிய பூங்காக்களுக்குள் நுழைய சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க நியூசிலாந்து முடிவு

அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட உதவும் வழிகளைத் தேடுவதால், நியூசிலாந்து தனது மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களான Milford Track மற்றும் Mount Cook ஆகியவற்றைப் பார்வையிட...

கோலாக்களைப் பாதுகாக்க மில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு

ஆஸ்திரேலியாவின் அழிந்து வரும் கோலாக்களைப் பாதுகாக்க ஒரு புதிய தேசிய பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியின் தென்மேற்கே அமைந்துள்ள லாங் பாயிண்ட் மற்றும் அப்பின் இடையே இதற்காக சுமார்...

ஆஸ்திரேலியர்களுக்கு $300 தடுப்பூசியை இலவசமாக வழங்குமாறு அழுத்தம் 

நாடு முழுவதும் மிகவும் தொற்றும் வைரஸிற்கான வழக்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆயிரக்கணக்கான பாதிக்கப்படக்கூடிய ஆஸ்திரேலியர்களுக்கு $300 மதிப்புள்ள RSV தடுப்பூசியை இலவசமாக்க மத்திய அரசை...

மெல்பேர்ணில் கார் விபத்து – மூவர் படுகாயம்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் நேற்று இரவு இரண்டு கார்கள் மோதிய விபத்தில் ஆறு பேர் காயமடைந்ததை அடுத்து, ஒரு பெண்ணின் கையில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது . இரவு 8.40 மணியளவில்...

கோலாக்களைப் பாதுகாக்க மில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு

ஆஸ்திரேலியாவின் அழிந்து வரும் கோலாக்களைப் பாதுகாக்க ஒரு புதிய தேசிய பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியின் தென்மேற்கே அமைந்துள்ள லாங் பாயிண்ட் மற்றும் அப்பின் இடையே இதற்காக சுமார்...