Newsகோட்டா குழுவினரை பாதுகாக்க சிறப்பு படையணிகள் வரவழைப்பு

கோட்டா குழுவினரை பாதுகாக்க சிறப்பு படையணிகள் வரவழைப்பு

-

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள கோட்டாபய ராஜபக்ச குழுவினருக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியின் போது மக்களின் எதிர்ப்புக்களை முறியடிக்க, கொழும்புக்கு சிறப்பு படையணிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொதுமக்களின் எதிர்ப்பை நாளை சனிக்கிழமை (09.07.2022) எதிர்கொள்ளும் வகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக அரச தலைவரின் மாளிகையைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பிரதமர் ரணில் மற்றும் மகிந்த தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெறும் 1,500 பேர் கூட இந்த பாதுகாப்புப் படைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஏற்கனவே 4,000-க்கும் அதிகமான இராணுவத்தினர் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து 3,000 காவல்துறையினர், கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக குடிமக்கள் பாதுகாப்பு படைப்பிரிவைச் (Civil defense force) சேர்ந்த சுமார் 1,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

படை முகாமிற்கு பாதுகாப்பு படையினரை நிலை நிறுத்தும்போது, முப்படையில் இருந்து இருவர் வீதம் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் ஈடுபடுத்தப்படுவார். குறைந்தபட்சம் 100 காவல்துறையினரும் 200 இராணுவத்தினரும் சிறப்பு நிலையங்களில் நிறுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

இளம் வயதிலேயே தொழில்முனைவோராக மாறிய ஆஸ்திரேலிய குழந்தைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்திலிருந்து, பெரியவர்களை விட பண மேலாண்மை பற்றி தெளிவாகப் பேசும் குழந்தைகள் குழுவைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. 6 ஆம் வகுப்பு படிக்கும் இந்தத்...

மின்சார பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடி மீது 130 குற்றச்சாட்டுகள்

தள்ளுபடி விலை கடையான Panda Mart மீது மின் பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக 130 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன . Energy Safe Victoria கூறுகையில், மார்ச் 2025...

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல்...

ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களின் ஒரு குழுவை பாதிக்கும் UK பாஸ்போர்ட் சட்டம்

புதிய பிரிட்டிஷ்-ஐரிஷ் பாஸ்போர்ட் சட்டங்களால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசாங்கங்கள் பெப்ரவரி 25 முதல் அமல்படுத்தவுள்ள புதிய பாஸ்போர்ட் விதிகள் காரணமாக...

ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களின் ஒரு குழுவை பாதிக்கும் UK பாஸ்போர்ட் சட்டம்

புதிய பிரிட்டிஷ்-ஐரிஷ் பாஸ்போர்ட் சட்டங்களால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசாங்கங்கள் பெப்ரவரி 25 முதல் அமல்படுத்தவுள்ள புதிய பாஸ்போர்ட் விதிகள் காரணமாக...

விக்டோரியாவின் காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதத்தை காட்டும் செயற்கைக்கோள் படங்கள்

விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீயால் அழிக்கப்பட்ட நகரங்களின் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் 290க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தப்...