Newsகோட்டா குழுவினரை பாதுகாக்க சிறப்பு படையணிகள் வரவழைப்பு

கோட்டா குழுவினரை பாதுகாக்க சிறப்பு படையணிகள் வரவழைப்பு

-

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள கோட்டாபய ராஜபக்ச குழுவினருக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியின் போது மக்களின் எதிர்ப்புக்களை முறியடிக்க, கொழும்புக்கு சிறப்பு படையணிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொதுமக்களின் எதிர்ப்பை நாளை சனிக்கிழமை (09.07.2022) எதிர்கொள்ளும் வகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக அரச தலைவரின் மாளிகையைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பிரதமர் ரணில் மற்றும் மகிந்த தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெறும் 1,500 பேர் கூட இந்த பாதுகாப்புப் படைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஏற்கனவே 4,000-க்கும் அதிகமான இராணுவத்தினர் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து 3,000 காவல்துறையினர், கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக குடிமக்கள் பாதுகாப்பு படைப்பிரிவைச் (Civil defense force) சேர்ந்த சுமார் 1,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

படை முகாமிற்கு பாதுகாப்பு படையினரை நிலை நிறுத்தும்போது, முப்படையில் இருந்து இருவர் வீதம் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் ஈடுபடுத்தப்படுவார். குறைந்தபட்சம் 100 காவல்துறையினரும் 200 இராணுவத்தினரும் சிறப்பு நிலையங்களில் நிறுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தினத்தன்று பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டதாக PhD மாணவர் மீது குற்றம்

ஆஸ்திரேலிய தின நிகழ்வில் Molotov cocktail தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக 24 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கோல்ட் கோஸ்ட் பகுதியில் திங்கட்கிழமை ஒரு...

இயற்கை பேரழிவுகளால் ஆஸ்திரேலியாவின் காப்பீட்டு இழப்புகள் பில்லியன் கணக்கான டாலர்களாக உயர்வு

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை, வெள்ளம் மற்றும் கடுமையான புயல்களால் ஏற்பட்ட காப்பீட்டு இழப்புகள் 3.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளன. 2025 ஆம் ஆண்டில்...

விரைவில் திறக்கப்படும் சர்வதேச மாணவர்களுக்கு Australia Awards Scholarships

2027 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியா விருதுகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு கிடைக்கும் . அதன்படி, விண்ணப்பங்கள் பெப்ரவரி 1,...

விக்டோரியாவின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பில் அறிமுகமாகும் Tap-and-Go முறை

விக்டோரியன் பொதுப் போக்குவரத்து அமைப்பில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தொடர்பு இல்லாத (Tap-and-Go) கட்டண தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் மற்றொரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தப் புதிய அமைப்பின்...

விக்டோரியாவின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பில் அறிமுகமாகும் Tap-and-Go முறை

விக்டோரியன் பொதுப் போக்குவரத்து அமைப்பில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தொடர்பு இல்லாத (Tap-and-Go) கட்டண தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் மற்றொரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தப் புதிய அமைப்பின்...

ஆஸ்திரேலியா முழுவதும் விவாதப் பொருளாக உள்ள Shopping Trolley பிரச்சனை

ஷாப்பிங் மால் வாகன நிறுத்துமிடங்களில் கைவிடப்பட்ட ஷாப்பிங் Trolleyகளின் காட்சிகள் ஆஸ்திரேலியா முழுவதும் சமூக விவாதத்தைத் தூண்டியுள்ளன. இந்த உரையாடலுக்கான முக்கிய காரணம், பெர்த் புறநகர்ப் பகுதியான...