Newsகோட்டா குழுவினரை பாதுகாக்க சிறப்பு படையணிகள் வரவழைப்பு

கோட்டா குழுவினரை பாதுகாக்க சிறப்பு படையணிகள் வரவழைப்பு

-

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள கோட்டாபய ராஜபக்ச குழுவினருக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியின் போது மக்களின் எதிர்ப்புக்களை முறியடிக்க, கொழும்புக்கு சிறப்பு படையணிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொதுமக்களின் எதிர்ப்பை நாளை சனிக்கிழமை (09.07.2022) எதிர்கொள்ளும் வகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக அரச தலைவரின் மாளிகையைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பிரதமர் ரணில் மற்றும் மகிந்த தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெறும் 1,500 பேர் கூட இந்த பாதுகாப்புப் படைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஏற்கனவே 4,000-க்கும் அதிகமான இராணுவத்தினர் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து 3,000 காவல்துறையினர், கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக குடிமக்கள் பாதுகாப்பு படைப்பிரிவைச் (Civil defense force) சேர்ந்த சுமார் 1,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

படை முகாமிற்கு பாதுகாப்பு படையினரை நிலை நிறுத்தும்போது, முப்படையில் இருந்து இருவர் வீதம் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் ஈடுபடுத்தப்படுவார். குறைந்தபட்சம் 100 காவல்துறையினரும் 200 இராணுவத்தினரும் சிறப்பு நிலையங்களில் நிறுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...