Newsஅரசாங்கத்துடன் இணைவது தொடர்பான முடிவை அறிவித்த சஜித்!

அரசாங்கத்துடன் இணைவது தொடர்பான முடிவை அறிவித்த சஜித்!

-

அரச செலவீணங்களை குறைக்கும் வகையில் தாம் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சுமார் 70இற்கும் அதிகமானோரை நியமிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. அதற்கு சர்வகட்சி அரசாங்கம் எனவும் பெயரிட்டுள்ளனர். அவ்வாறானதொரு சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர், நாட்டிலுள்ள பொதுமக்களின் அபிலாசைகள் இல்லாதொழிக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகிய நாம் அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம். பிழையான செயற்பாடுகளுக்கு நாம் எதிர்ப்பு வெளியிடுவதுடன் அந்த பிரச்சினையை தீர்க்க யோசனைகளை முன்வைப்போம். நாடு வீழ்ந்துள்ள நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப நாம் எதிரணியிலிருந்து செயற்படுவோம். இதனால் செலவினம் குறைவடையும் என்பதுடன் அந்த தொகையினை எமது தாய்மார்களுக்கான போசனை வேலைத்திட்டங்களுக்காகவும் பாடசாலை மாணவர்களுக்கான பகலுணவு வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கிட வேண்டும்.மாணவர்களின் கல்வி மற்றும் டிஜிட்டல் எண்ணக்கருவின் ஊடாக நாட்டின் 4 பாகங்களிலும், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அந்த நிதிகளை ஒதுக்க வேண்டும்.

அமைச்சரவை அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வதைவிட இதனை செய்வது மேலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...