Newsபடகு கவிழ்ந்ததில் 9 பேர் மாயம் - ஒருவர் பலி -...

படகு கவிழ்ந்ததில் 9 பேர் மாயம் – ஒருவர் பலி – இன்னும் உயரலாம் என அச்சம்

-

இந்தோனேஷியாவில் கடலில் படகு கவிழ்ந்து ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

மீன் பிடிக்க சென்றிருந்த மேலும் 9 பேர் காணாமல் போயுள்ளனர். தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா நில நடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதி ஆகும். 

இங்குள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று மீன் பிடிக்க மீனவர்கள் பலர் தங்களது படகுகளில் சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியதால் அலையின் வேகம் அதிகரித்தது. 

இதனால் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தவர்கள் உடனே கரை திரும்புமாறு அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டிருந்தது. 

இருப்பினும் இந்த அதிக அலை காரணமாக மீன் பிடிக்க சென்றிருந்த ஒரு படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் படகில் இருந்த ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். மீன் பிடிக்க சென்றிருந்த மேலும் 9 பேர் காணாமல் போயுள்ளனர். 

இதனால் பலியானோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் அறிமுகமாகும் புதிய வேலை வாய்ப்புகள்

விக்டோரியா மாநிலத்தில் 10 ஆண்டுகளில் 8 லட்சம் புதிய வீடுகள் கட்டுவது தொடர்பான வணிகத்திற்கான புதிய ஆட்சேர்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விக்டோரியா மாகாணத்தில் நிலவும் வீட்டு நெருக்கடிக்கு...

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்ள இன்னொரு நிவாரணம்

குழந்தை பிறக்கும் பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு மற்றும் மருத்துவ சேவைக்காக நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் பில்லியன் டாலர்கள் பெறப்படும்...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் புதிய சட்டம்

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடைசெய்யும் திட்டத்தை ஏற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடைசெய்யும் ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற முதல் சட்டத்தை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும்...