Newsகருக்கலைப்பு செய்த காதலிக்கு நேர்ந்த கதி - அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

கருக்கலைப்பு செய்த காதலிக்கு நேர்ந்த கதி – அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

-

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நபர் தனது கருக்கலைப்பு செய்த காதலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

22 வயதான ஹரோல்டு தாம்ப்சன், 26 வயதான கேப்ரியல்லா கொன்சேல்ஸ்-ஐ கொலை செய்தார் என டல்லாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

டெக்சாசில் இருந்து சுமார் 800 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் கொலராடோவுக்கு பயணம் செய்த கொன்சேல்ஸ் அங்கு கருக்கலைப்பு செய்து கொண்டார். கொலராடோவில் கருவுற்ற பெண்கள், எந்த நிலையில் இருந்தாலும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கின்றது.

கருவுற்று ஆறு வாரங்கள் ஆனவர்கள், மருத்துவ அவசர நிலையின்றி தாமாக முன்வந்து கருக்கலைப்பு செய்வது டெக்சாஸ் மாகாணத்தில் சட்டரீதியில் குற்ற செயல் ஆகும். சம்பவத்தன்று கொன்சேல்ஸ்-ஐ சந்தித்த தாம்ப்சன் அவரிடம் சிறுது நேரம் பேசிக் கொண்டிருந்தார். 

பின் தாம்ப்சன், கொன்சேல்ஸ் கழுத்தை நெறிக்க தொடங்கியுள்ளார். கொன்சேல்ஸ் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து நடந்து செல்ல முயன்றிருக்கிறார். 

அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்த தாம்ப்சன் கொன்சேல்ஸ் தலையில் சுட்டார். ஏற்கனவே பல சமயங்களில் தாம்ப்சன் கொன்சேல்ஸ்-ஐ தாக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

குறித்த சம்பவத்தில் காதலியை கொலை செய்த தாம்ப்சனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

கணையப் புற்றுநோயைக் கண்டறிய புதிய இரத்தப் பரிசோதனை

ஆஸ்திரேலிய கணைய புற்றுநோய் அறக்கட்டளை (PanKind) கணைய புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான புதிய இரத்த பரிசோதனை இப்போது ஆஸ்திரேலியாவில் கிடைக்கிறது என்று அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, இந்த இரத்தப்...

ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை சர்வதேச வர்த்தக விலை குறியீடுகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. அதன்படி, கடந்த...

மனதையும் கணினியையும் இணைக்கும் ஒரு இடைமுகத்தை உருவாக்கும் Neuralink

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான அமெரிக்க நிறுவனமான Neuralink, அதன் சமீபத்திய ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை கணினியையும் மனித மூளையையும் இணைக்கக்கூடிய ஒரு...

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...