Newsகருக்கலைப்பு செய்த காதலிக்கு நேர்ந்த கதி - அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

கருக்கலைப்பு செய்த காதலிக்கு நேர்ந்த கதி – அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

-

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நபர் தனது கருக்கலைப்பு செய்த காதலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

22 வயதான ஹரோல்டு தாம்ப்சன், 26 வயதான கேப்ரியல்லா கொன்சேல்ஸ்-ஐ கொலை செய்தார் என டல்லாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

டெக்சாசில் இருந்து சுமார் 800 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் கொலராடோவுக்கு பயணம் செய்த கொன்சேல்ஸ் அங்கு கருக்கலைப்பு செய்து கொண்டார். கொலராடோவில் கருவுற்ற பெண்கள், எந்த நிலையில் இருந்தாலும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கின்றது.

கருவுற்று ஆறு வாரங்கள் ஆனவர்கள், மருத்துவ அவசர நிலையின்றி தாமாக முன்வந்து கருக்கலைப்பு செய்வது டெக்சாஸ் மாகாணத்தில் சட்டரீதியில் குற்ற செயல் ஆகும். சம்பவத்தன்று கொன்சேல்ஸ்-ஐ சந்தித்த தாம்ப்சன் அவரிடம் சிறுது நேரம் பேசிக் கொண்டிருந்தார். 

பின் தாம்ப்சன், கொன்சேல்ஸ் கழுத்தை நெறிக்க தொடங்கியுள்ளார். கொன்சேல்ஸ் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து நடந்து செல்ல முயன்றிருக்கிறார். 

அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்த தாம்ப்சன் கொன்சேல்ஸ் தலையில் சுட்டார். ஏற்கனவே பல சமயங்களில் தாம்ப்சன் கொன்சேல்ஸ்-ஐ தாக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

குறித்த சம்பவத்தில் காதலியை கொலை செய்த தாம்ப்சனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...