Newsகருக்கலைப்பு செய்த காதலிக்கு நேர்ந்த கதி - அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

கருக்கலைப்பு செய்த காதலிக்கு நேர்ந்த கதி – அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

-

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நபர் தனது கருக்கலைப்பு செய்த காதலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

22 வயதான ஹரோல்டு தாம்ப்சன், 26 வயதான கேப்ரியல்லா கொன்சேல்ஸ்-ஐ கொலை செய்தார் என டல்லாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

டெக்சாசில் இருந்து சுமார் 800 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் கொலராடோவுக்கு பயணம் செய்த கொன்சேல்ஸ் அங்கு கருக்கலைப்பு செய்து கொண்டார். கொலராடோவில் கருவுற்ற பெண்கள், எந்த நிலையில் இருந்தாலும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கின்றது.

கருவுற்று ஆறு வாரங்கள் ஆனவர்கள், மருத்துவ அவசர நிலையின்றி தாமாக முன்வந்து கருக்கலைப்பு செய்வது டெக்சாஸ் மாகாணத்தில் சட்டரீதியில் குற்ற செயல் ஆகும். சம்பவத்தன்று கொன்சேல்ஸ்-ஐ சந்தித்த தாம்ப்சன் அவரிடம் சிறுது நேரம் பேசிக் கொண்டிருந்தார். 

பின் தாம்ப்சன், கொன்சேல்ஸ் கழுத்தை நெறிக்க தொடங்கியுள்ளார். கொன்சேல்ஸ் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து நடந்து செல்ல முயன்றிருக்கிறார். 

அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்த தாம்ப்சன் கொன்சேல்ஸ் தலையில் சுட்டார். ஏற்கனவே பல சமயங்களில் தாம்ப்சன் கொன்சேல்ஸ்-ஐ தாக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

குறித்த சம்பவத்தில் காதலியை கொலை செய்த தாம்ப்சனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது . மெல்பேர்ண் நகரில் தற்போது 24 மணி நேர கேமரா...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BOM) கூறுகிறது. புதிய வலைத்தளம் $4 மில்லியன் திட்டமாகும். அணுகல்...

இரட்டிப்பாகும் நாய்கள் மற்றும் பூனைகள் மீதான வரிகள்

விக்டோரியாவில் செல்லப்பிராணி பதிவு கட்டணத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. விக்டோரியாவின் அதிகரித்து வரும் நிகர கடன் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பதிவுக் கட்டணத்தை இரட்டிப்பாக்க...

18–20 வயதுடைய இளம் தொழிலாளர்கள் வயதுவந்தோர் ஊதியத்தைப் பெறுவார்களா?

18, 19 மற்றும் 20 வயதுடைய இளம் தொழிலாளர்களுக்கு பெரியவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க முடிவு செய்யப்பட்டால், அது ஆஸ்திரேலியாவில் இளைஞர்களின் வேலைகள் அழிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்...

18–20 வயதுடைய இளம் தொழிலாளர்கள் வயதுவந்தோர் ஊதியத்தைப் பெறுவார்களா?

18, 19 மற்றும் 20 வயதுடைய இளம் தொழிலாளர்களுக்கு பெரியவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க முடிவு செய்யப்பட்டால், அது ஆஸ்திரேலியாவில் இளைஞர்களின் வேலைகள் அழிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்...

பாலர் பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு உதவும் அரசு

தற்போதுள்ள தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் 100 பாலர் பள்ளிகளைக் கட்ட அரசாங்கம் தயாராகி வருகிறது. இதன் மூலம் பெற்றோர்கள் இரு குழந்தைகளுக்கும் ஒரே இடத்தில் பள்ளிக் கல்வியை வழங்க...