Newsஇன்ஸ்டகிராம் பதிவால் சுட்டுக் கொல்லப்பட்ட அழகி

இன்ஸ்டகிராம் பதிவால் சுட்டுக் கொல்லப்பட்ட அழகி

-

ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று பிரபலமானார்.

ஓர் ஆண்டுக்கு முன் சிறைக் கலவரத்தின்போது இறந்த, போதைப்பொருள் கடத்தல் நபர் லியான்ட்ரோ நோரெரோவுடன் இவருக்கு தொடர்பு இருந்ததாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள, கோய்புரா கடந்த மாதம் 28ஆம் திகதி கியூவெடோ நகருக்கு வந்துள்ளார்.

அவர் அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று, மதிய உணவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத இரு நபர்கள் பதிவினைப் பார்த்து அங்கு வந்துள்ளனர்.

ஒருவர் நுழைவாயிலுக்கு அருகில் நிற்க, மற்றொரு நபர் கோய்புராவை நோக்கி வந்து 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நிலைகுலைந்து விழுந்த அவர் உயிரிழந்துள்ளார்.

நீதிமன்ற விசாரணையின்போது, கோய்புராவுடனான தனது உறவை வெளிப்படுத்த வேண்டாம் என கொல்லப்பட்ட நோரெரோ கணக்காளரிடம் கெஞ்சினார் என்றும், தனது மனைவிக்கு கோய்புரா குறித்து தெரிந்தால் கலவரம் ஆகிவிடும் என்றும் கூறினார் என வாதிடப்பட்டது.

Latest news

Facebook மற்றும் Instagram பற்றிய ஒரு சிறப்பு சோதனை

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் வியாழக்கிழமை முறையான விசாரணையை தொடங்கியுள்ளது. டிஜிட்டல் சேவைகள்...

ஆஸ்திரேலியர்களில் 6 பேரில் ஒருவர் ஊனமுற்றவர் என கருத்துகணிப்பு

மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆறு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஊனமுற்றவர். இது மொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 4.4 மில்லியன் என...

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுரை

லெப்டினன்ட் ஜெனரல் Mechel McGuinness, சைபர் செக்யூரிட்டி தலைவர், MediSecure இ-ப்ரிஸ்கிரிப்ஷன் நிறுவனத்திற்கு எதிரான தனிப்பட்ட தரவுகளுக்கு எதிரான குற்றச்சாட்டு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று...

தெற்கு ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக அரசாங்க கட்டணங்கள் உயர்வு

தெற்கு ஆஸ்திரேலியாவில் அரசு சேவைகளுக்குப் பொருந்தும் தொடர் கட்டணங்கள் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளன. தெற்கு ஆஸ்திரேலிய பொருளாளர் ஸ்டீபன் முல்லிகன் நேற்று செய்தியாளர் சந்திப்பில்...

உலகில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட 10 நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

உலகில் அதிகமான கோடீஸ்வரர்கள் வாழும் 10 நகரங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னியும் இடம் பெற்றுள்ளது. உலகின் மொத்த மக்கள்தொகையில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட 10 நகரங்களின் பெயர்களை உலக...

ஆஸ்திரேலியர்களில் 6 பேரில் ஒருவர் ஊனமுற்றவர் என கருத்துகணிப்பு

மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆறு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஊனமுற்றவர். இது மொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 4.4 மில்லியன் என...