Newsமுதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

முதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

-

ஆஸ்திரேலிய, சீனத் தற்காப்பு அமைச்சர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கிய முன் னேற்றப்படி என வருணிக்கப் படுகிறது.

“வெளிப்படையான முழுமையான கருத்து பரிமாற்றத்திற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆஸ்திரேலியாவின் அக்கறைக்குரிய பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி யிருந்தேன்,” என்று ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்தார்.

இருதரப்புக்கும் இடையே நடை பெற்ற சந்திப்பை அவர் நேற்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா மாநாட்டையொட்டி மார்ல்சும் சீன தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்கியும் சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் கலந்துரையாடினர். தற்போதையக் காலக்கட்டத்தில் வெளிப்படையாக உரையாடுவது முக்கியம் என்று துணைப் பிரதமரு மான திரு மார்ல்ஸ் குறிப்பிட்டார்.

“ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சிக்கலானது. அதற்கு நேரில் சந்தித்து பேசுவதே நல்லது” என்றும் அவர் சொன்னார். ஆனால் இந்தச் சந்திப்பு பற்றி சீன அரசாங்கமோ ஜெனரல் வெய்யோ உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

கொவிட்-19 கிருமி உருவான இடத்தைக் கண்டுபிடிக்க தன்னிச் சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தினார்.

இது, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவில் ‘5ஜி’ கட்டமைப்பை உருவாக்க சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவெய்யுக்கு தடை விதிக்கப் பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசம் அடைந்தது.

Latest news

ஆஸ்திரேலியாவில் நிதி மோசடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. கிரெடிட்...

பிரபல கடையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா – அதிருப்தியடைந்துள்ள வாடிக்கையாளர்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான ஷாப்பிங் மாலில் மார்பளவு உயரத்தில் அலமாரிகளில் பொருத்தப்பட்ட புதிய கேமரா அமைப்பைப் பற்றி வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வூல்வொர்த்ஸின் பல கிளைகளில்,...

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

அல்பானீஸின் வீட்டின் முன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்

நியூ சவுத் வேல்ஸ் மத்திய கடற்கரையில் உள்ள பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வீட்டின் முன் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவின் தேசிய வீட்டுவசதி நெருக்கடியின் மீது...

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயரும் அறிகுறி

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். விக்டோரியன் அரசாங்க நிறுவனம் ஒன்றால் செய்யப்பட்ட வாடகைகளை திருத்தும் திட்டம் இதற்குக் காரணமாக...