Newsஆஸ்திரேலியாவில் 11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

ஆஸ்திரேலியாவில் 11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

-

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றின் பாதையில் வைத்து 11 வயது சிறுமி மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை ஃபிராங்க்ஸ்டன் ஷாப்பிங் சென்டரில் ஒரு பாதையில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தியால் குத்தப்பட்ட 11 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 12 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

நள்ளிரவு 12.15 மணியளவில் பேசைட் சென்டர் ஷாப்பிங் மாலுக்கு அருகிலுள்ள கேலரி லேனில் மூன்று இளைஞர்கள் சிறுமியை அணுகியுள்ளனர். இதன்போது கையடக்க தொலைபேசி மற்றும் தனிப்பட்ட பொருட்களை ஒப்படைக்குமாறு கோரினர்,

இததனையடுத்து கூரிய ஆயுதத்தால் சிறுமியை பலமுறை குத்தியுள்ளனர். சிறுமி உடலில் காயங்களுடன் ஃபிராங்க்ஸ்டன் வைத்தியசாலையில் துணை வைத்தியர்கள் அனுமதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த சிறுதி ரோயல் குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விரைந்து செயற்பட்ட போக்குவரத்து பொலிஸார் குறித்த சிறுவர்களை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து 14 வயது சிறுவன் மற்றும் 12 வயது சிறுமி மீது ஆயுதம் ஏந்திய கொள்ளை மற்றும் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பின்னர் குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...

ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் robotics

ஆஸ்திரேலியாவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாடங்களை ஊக்குவிப்பதற்காக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு robotics அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, coding வகுப்புகள், electronic tablet மற்றும்...

குற்றச் செயல்களுக்காக குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவைக் கண்டறிய நடவடிக்கைகள்

துப்பாக்கிச் சூடு மற்றும் வீடு கொள்ளைகளை நடத்துவதற்கு குழந்தைகளைச் சேர்ப்பதாக ஒரு புதிய குற்றக் கும்பல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. G7 என்று அழைக்கப்படும் இந்தக் குழுவில்...

விக்டோரியாவில் கால் பகுதி குடும்பங்கள் விரைவில் $100 மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கலாம்

விக்டோரியாவின் அடுத்த சுற்று மின் சேமிப்பு போனஸுக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் திறக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 25 முதல், சலுகை அட்டை உள்ள சுமார் 900,000...