Newsஇலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

-

இலங்கையில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த வாரம் கிராமிய பகுதிகளில் பாடசாலைகள் முன்னெடுக்கப்பட்டமை போன்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து அசௌகரியமற்ற பாடசாலைகளை வழமைபோன்று முன்னெடுக்க வேண்டும்.

குறித்த பாடசாலைகளில், போக்குவரத்து பிரச்சினை உள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் ஊடாக, அந்த ஆசிரியர்களின் பிரத்தியேக விடுமுறையில் விடுவித்து, பொறுத்தமான நேர அட்டவணையை தயாரிக்க வேண்டும்.

அதேநேரம், கடந்த வாரம் பாடசாலைகள் இயங்காத நகரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளை 3 நாட்களுக்கு இயக்க கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, செவ்வாய், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் குறித்த பாடசாலைகள் இயங்க வேண்டும்.

அந்தப் பாடசாலைகளில், ஆரம்பப் பிரிவு கற்பித்தல் பணிகளை முன்னெடுக்கும் நாட்கள் குறித்து, தீர்மானிக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வராத நாட்களில் இணையவழி முறைமையில், வீட்டுப் பாடங்களை வழங்குதல் உள்ளிட்ட முறைகள் ஊடாக கற்பித்தல் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

போக்குவரத்து பிரச்சினை காரணமாக, பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்காக, குறித்த நாட்களை தனிப்பட்ட விடுமுறையாக கருதாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Latest news

FOGO DUSTUBIN பற்றி ஆஸ்திரேலியர்கள் தெரிவித்த கருத்துக்கள்

ஆஸ்திரேலிய நகராட்சிகளில் கழிவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் FOGO குப்பைத் தொட்டிகளின் அறிமுகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இது குறித்து பொதுமக்களிடையே கலவையான எதிர்வினைகள் இருப்பதாகத் தெரிகிறது....

பிறப்புகளை அதிகரிக்க அரசாங்கத்திடமிருந்து $5,000 போனஸ்

நாடு முழுவதும் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்திற்கு தீர்வாக, குழந்தை போனஸை மீண்டும் வழங்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, புதிய பெற்றோருக்குப் பிறக்கும் ஒவ்வொரு...

NSW வெள்ளத்தில் காணாமல் போன பெண்ணும் காரும்

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண் தனது காருடன் காணாமல் போயுள்ளார். மாநிலம் தற்போது பலத்த மழையை அனுபவித்து வருகிறது. நேற்று...

பார்வையற்றவர்களுக்கு நாடு தழுவிய ரீதியில் Uber சலுகைகள்

பார்வையற்றோர் அல்லது பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கான டாக்ஸி மானியத் திட்டங்களில் Uber சேவைகளைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. மாநில அரசுகள், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு டாக்ஸி சேவைகளுக்கான...

உலகின் வயதான கருவில் பிறந்த குழந்தை பதிவு

உலகின் பழமையான கருவில் இருந்து பிறந்த குழந்தை அமெரிக்காவிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 26, 2025 அன்று பிறந்த அந்தக் குழந்தைக்கு Thaddeus Daniel Pierce என்று பெயரிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட...

பிரசவத்திற்கு முன்பு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த ஆஸ்திரேலிய தாய்

பெர்த்தைச் சேர்ந்த 34 வயது கர்ப்பிணித் தாயான Kezia Summers, தனது குழந்தை பிறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் நடத்திய இரத்தப்...