Newsசீன ஊடகங்களின் கடும் தாக்குதல் - உச்சக்கட்ட கோபத்தில் ஆஸ்திரேலிய பிரதமர்

சீன ஊடகங்களின் கடும் தாக்குதல் – உச்சக்கட்ட கோபத்தில் ஆஸ்திரேலிய பிரதமர்

-

சீன ஊடகங்கள் கடும் தாக்குதலை முன்னெடுத்துள்ளமையினால் ஆஸ்திரேலிய பிரதமர் கடும் கோமடைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அறியாமையில் உள்ளார் எனவும் சீனாவும் அவுஸ்திரேலியாவும் தங்கள் உறவுகளை சீர்செய்வதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன எனவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சில நாட்களிற்கு முன்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை சீனா தாய்வான் பதற்றத்துடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டிருந்தார்.

உக்ரைனை கைப்பற்றும் விடயத்தில் விளாடிமிர் புட்டின் தோல்வியடைந்துள்ளமை இறைமை உள்ள நாட்டின் மீது படைபலத்தை பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் எதிர்ப்பை சந்திக்கும் என்பதை இது புலப்படுத்தியுள்ளது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்திருந்தார்.

ஆஸ்திரேலிய பிரதமரின் இந்த கருத்தினை கடுமையாக விமர்சித்துள்ள சீனா டெய்லி அவுஸ்திரேலிய பிரதமரின் கருத்து இராஜதந்திர அணுகுமுறைகள் அரசியல் யதார்த்தங்கள் மீதான அவரது திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் உக்ரைன் குறித்த சீனாவின் நிலைப்பாட்டை அறியாத அளவிற்கு தவறான தகவல்களை கொண்டவர் என்பதை நம்புவது கடினம் எனவும் குறிப்பிட்டுள்ள சீனாவின் நாளிதழ் சீனா தனது நிலைப்பாட்டை பல தடவை வெளிப்படுத்தியுள்ளது தாய்வானின் நிலையை அறியாத அளவிற்கு அவர் அறியாதவராகயிருக்கலாம் என ஆசிரிய தலையங்களித்தில் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

தொழிற்கட்சி சீனாவை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் கொள்கையை பறைசாற்றிக்கொண்டு அதன் அணியில் ஆர்வத்துடன் இணைந்துள்ளது என சீன நாளிதழ் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யாவின் மூலோபாய தவறுகளில் இருந்து சீனா பாடம் கற்கவேண்டும் என தெரிவித்துள்ளதை தொடர்ந்து சீனாவின் வெளிவிவகார பேச்சாளரும் அவுஸ்திரேலிய பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

இது பொறுப்பற்ற கருத்து உக்ரைன் விவகாரம் தொடர்பில் எங்களின் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் தெரிவித்துவந்துள்ளோம்,தாய்வான் உக்ரைனில்லை ஒப்பிடமுடியாது என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Latest news

இன்ஸ்டகிராம் பதிவால் சுட்டுக் கொல்லப்பட்ட அழகி

ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று...

உக்ரைன் மீது மீண்டும் டிரோன் தாக்குதல் செய்த ரஷ்ய படைகள்

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின. இந்த நிலையில் உக்ரைனின்...

குயின்ஸ்லாந்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பண்ணை ஒன்றில் உயிருடன் புதைக்கப்பட்டதாக கருதப்படும் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள Mount Mee பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில்...

Cashless முறைக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் துரித உணவு நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய துரித உணவு நிறுவனமான Nandos, அந்த தயாரிப்புகளை பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ரொக்கமில்லா பொருட்களாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இணையத்தில் தீவிர...

Cashless முறைக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் துரித உணவு நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய துரித உணவு நிறுவனமான Nandos, அந்த தயாரிப்புகளை பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ரொக்கமில்லா பொருட்களாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இணையத்தில் தீவிர...

ஆஸ்திரேலியாவில் வேலை தேடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவில் வேலை வழங்குவதாக கூறி ஏமாற்றும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. சமீபத்திய ஸ்கேம்வாட்ச் அறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் போலி ஆன்லைன் வேலைகளால் ஆஸ்திரேலியர்கள் $24.7 மில்லியன் இழந்துள்ளனர். வாழ்க்கைச் செலவு...