Newsஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 45 இலங்கையர்களின் பரிதாப நிலை!

ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 45 இலங்கையர்களின் பரிதாப நிலை!

-

ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பினூடாக சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதனுடன், 20 வயதுக்கு கீழ்பட்ட 25 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் தற்போது குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இதேவேளை வெள்ளவாய எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் விதிமுறைகளை மீறி செயற்பட்டார்கள் என தெரிவித்து 13 பேர் கைது செய்யபபட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக பதற்றத்தை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டார்கள் என தெரிவித்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

யாழ்ப்பாணத்தில் தாயைக் கொன்றுவிட்டு “நானே கொன்றேன்” என சுவற்றில் எழுதி வைத்த சிறுவன்

யாழ். தெல்லிப்பளையில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல் போன அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், தாயை தானே கொலை...

உலகிலேயே அதிக நேரம் தூங்குபவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது

மனித தூக்கம் தொடர்பாக ஒரு அமெரிக்க ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வின்படி, அந்த தரவரிசையில் 12 மணிநேரத்துடன் பல்கேரியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அகோலா உள்ளது,...

39 ஆண்டுகளுக்குப் பிறகு மாறும் ஆஸ்திரேலியர்களின் விருப்பமான பயண இலக்கு

ஆஸ்திரேலியர்கள் பார்வையிட மிகவும் பிரபலமான 10 நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் பணியகம் சமீபத்தில் அறிக்கையை...

வீட்டுச் செலவுகளைப் பொறுத்தவரை விக்டோரியாவை விட 5 மாநிலங்கள் முன்னிலை

ஆஸ்திரேலியர்களின் வீட்டுச் செலவு மேலும் 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் 4 முக்கிய வகைகளின் கீழ் அவுஸ்திரேலியர்களின் உள்நாட்டுச் செலவு அதிகரித்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்படி,...

விக்டோரியன் குடும்பங்களுக்கு $400 மானியம் வழங்க முடிவு

2024ஆம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 700,000 ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு...

ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயால் கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் என்னென்ன தெரியுமா?

ஹார்வர்டு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வின்படி, தினமும் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினால், டிமென்ஷியாவால் இறக்கும் அபாயத்தைக் குறைக்கலாம். இந்த ஆய்வு 28 வயதுக்கு மேற்பட்ட 92,000...