Newsஜனாதிபதியாகும் தீவிர முயற்சியில் அனுர பிரியதர்சன யாப்பா

ஜனாதிபதியாகும் தீவிர முயற்சியில் அனுர பிரியதர்சன யாப்பா

-

முன்னாள் மூத்த அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை ஜூலை 20 ஆம் திகதி சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக மிகவும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இருந்து முன்னர் வெளிவந்த ‘சண்டே லீடர்’ வார ஏட்டின் குழுமத்துக்கு நெருக்கமான இணையத்தளமே இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு நாட்டின் ஜனாதிபதியாக மிதவாதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் அபிப்பிராயம் இருப்பதாக அனுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அநுர பிரியதர்சன யாப்பாவுக்கு ஆதரவளிக்க பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமன்றி பெருமளவிலான சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவும் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருப்பதாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கேட்ட போது, அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய தகவல்களின்படி ஜே.வி.பி. கட்சியின் அனுரகுமார திசநாயக்கவும் அரச தலைவர் தேர்தலில் போட்டடியிடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...