Newsஅரசாங்கத்துடன் இணைவது தொடர்பான முடிவை அறிவித்த சஜித்!

அரசாங்கத்துடன் இணைவது தொடர்பான முடிவை அறிவித்த சஜித்!

-

அரச செலவீணங்களை குறைக்கும் வகையில் தாம் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சுமார் 70இற்கும் அதிகமானோரை நியமிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. அதற்கு சர்வகட்சி அரசாங்கம் எனவும் பெயரிட்டுள்ளனர். அவ்வாறானதொரு சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர், நாட்டிலுள்ள பொதுமக்களின் அபிலாசைகள் இல்லாதொழிக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகிய நாம் அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம். பிழையான செயற்பாடுகளுக்கு நாம் எதிர்ப்பு வெளியிடுவதுடன் அந்த பிரச்சினையை தீர்க்க யோசனைகளை முன்வைப்போம். நாடு வீழ்ந்துள்ள நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப நாம் எதிரணியிலிருந்து செயற்படுவோம். இதனால் செலவினம் குறைவடையும் என்பதுடன் அந்த தொகையினை எமது தாய்மார்களுக்கான போசனை வேலைத்திட்டங்களுக்காகவும் பாடசாலை மாணவர்களுக்கான பகலுணவு வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கிட வேண்டும்.மாணவர்களின் கல்வி மற்றும் டிஜிட்டல் எண்ணக்கருவின் ஊடாக நாட்டின் 4 பாகங்களிலும், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அந்த நிதிகளை ஒதுக்க வேண்டும்.

அமைச்சரவை அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வதைவிட இதனை செய்வது மேலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் நிதி மோசடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. கிரெடிட்...

பிரபல கடையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா – அதிருப்தியடைந்துள்ள வாடிக்கையாளர்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான ஷாப்பிங் மாலில் மார்பளவு உயரத்தில் அலமாரிகளில் பொருத்தப்பட்ட புதிய கேமரா அமைப்பைப் பற்றி வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வூல்வொர்த்ஸின் பல கிளைகளில்,...

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

அல்பானீஸின் வீட்டின் முன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்

நியூ சவுத் வேல்ஸ் மத்திய கடற்கரையில் உள்ள பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வீட்டின் முன் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவின் தேசிய வீட்டுவசதி நெருக்கடியின் மீது...

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயரும் அறிகுறி

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். விக்டோரியன் அரசாங்க நிறுவனம் ஒன்றால் செய்யப்பட்ட வாடகைகளை திருத்தும் திட்டம் இதற்குக் காரணமாக...