Newsஎதற்காக 'சாரி'...போலீசையே குழம்ப வைத்த மாணவர்கள்

எதற்காக ‘சாரி’…போலீசையே குழம்ப வைத்த மாணவர்கள்

-

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளின் சுவர்கள், வீதிகள் போன்ற பல இடங்களில் சிவப்பு நிறத்தில், பெரிய எழுத்துக்களால் சாரி என எழுதப்பட்டுள்ளது. கைகளால் எழுதப்பட்டு, திரும்பி பக்கமெல்லாம் சாரி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி நிர்வாகிகள், பொது மக்கள் என பலரும் இதை யார் எழுதினார்கள், எதற்காக சாரி என குழம்பிப் போயினர்.

இது பற்றி போலீசில் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலில் பள்ளி நிர்வாகத்தினர் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளால் கோபமடைந்த மாணவர்கள் யாராவது இதை செய்திருக்கலாம் என்றே அனைவரும் நினைத்தனர். இருந்தாலும் எதற்காக சாரி கேட்டார்கள் என இப்போது வரை காரணம் தெரியவில்லை.

கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மர்மமான முறையில் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். உணவு விநியோகம் செய்யும் நபர்கள் பயன்படுத்தும் பெரிய பையில் இருந்து சிவப்பு நிற சாயத்தால் அவர்கள் பல இடங்களில் சாரி என்று எழுதுவது கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பாதிவாகி உள்ளது.

அந்த நபர்கள் யார், எதற்காக இப்படி செய்தார்கள் என போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். அந்த மர்ம நபர்களை அடையாளம் கண்டு, கைது செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் இது போன்று செய்வது கர்நாடக போலீஸ் விதிகளின் படி தண்டைக்குரிய குற்றமாகும். அதனால் அந்த மர்ம நபர்களை கண்டறிய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு புதிய சேவை

ஆஸ்திரேலியாவில் எங்கும் குறுஞ்செய்திகளை அனுப்ப Telstra செயற்கைக்கோளிலிருந்து மொபைல் வரை குறுஞ்செய்தி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் கவரேஜ் உள்ள பகுதிகளில் ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய...

ஆஸ்திரேலியாவில் அழகுசாதன ஊசிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்

நோயாளிகளின் பாதுகாப்பிற்காக, சுகாதார நிபுணர்களின் அழகுசாதன ஊசி தொழில் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியா முடிவு செய்யப்பட்டுள்ளது. நோயாளி பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

புதிய போராட்டக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் போராட்ட உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஆஸ்திரேலியா முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சட்டங்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

சிட்னியில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட உடல் – ஒருவர் கைது

சிட்னியின் உள் மேற்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் பல கத்திக்குத்து காயங்களுடன் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது...

சட்டவிரோத புகையிலை சந்தையை சுத்தம் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை

சட்டவிரோத புகையிலை கறுப்புச் சந்தை தெருக்களில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறி, அதை சுத்தம் செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று NSW பிரதமர்...