Cinemaடி.ராஜேந்தருக்கு உடல்நல பாதிப்பு...மேல்சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்ல முடிவு

டி.ராஜேந்தருக்கு உடல்நல பாதிப்பு…மேல்சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்ல முடிவு

-

தமிழ் சினிமா நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியில் பரவியதால், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க அவரது மகனும் நடிகருமான சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், திடீர் நெஞ்சு வலி காரணமாக எனது தந்தை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு வயிற்றில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை கவனித்தில் கொண்டு அவரை உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. எனது தந்தை நல்ல சுய நினைவுடன் உள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்து, அன்பு காட்டு ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

டி.ராஜேந்தர் விரைவில் பூரணமாக குணமடைந்து வருவார்கள். விரைவில் அவர் ரசிகர்களை மீண்டும் சந்திப்பார் என சிலம்பரசன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். டி.ராஜேந்தர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். டி.ராஜேந்தர் தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்கள். இதனால் தற்போதும் தினமும் 15 பேர் வரை அவரை சந்தித்து வருவதாக டி.ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

1980 களில் சினிமாவில் அறிமுகமான டி.ராஜேந்தர், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பல திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். டி.ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லலாமா என அவரது குடும்பத்தினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் விசா நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், வெளிநாட்டிற்கு புறப்பட உள்ளதாக உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Latest news

Gold Coast வீட்டில் தீப்பிடித்து எரிந்த மின்சார வாகனம்

கோல்ட் கோஸ்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (06) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...

தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களைத் தடுக்க Jetstar-இன் புதிய திட்டம்

விமான தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அதன் அனைத்து விமானங்களையும் அதற்கேற்ப புதுப்பிக்கத் தொடங்கியுள்ளதாக...

ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு சிறப்பு அறிவிப்பு

2025 கூட்டாட்சித் தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் இன்றாகும் (7 ஏப்ரல்). 18 வயதை பூர்த்தி செய்த தகுதியுள்ள ஆஸ்திரேலியர்கள் இன்று (07) இரவு...

இனி ஆஸ்திரேலியர்களுக்கு $4,000 சேமிக்க ஒரு சிறப்பு வாய்ப்பு

மலிவு விலையில் சூரிய மின்கலங்களை வழங்கும் திட்டத்தை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று (06) அறிவித்தார். மே 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர்...

ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு சிறப்பு அறிவிப்பு

2025 கூட்டாட்சித் தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் இன்றாகும் (7 ஏப்ரல்). 18 வயதை பூர்த்தி செய்த தகுதியுள்ள ஆஸ்திரேலியர்கள் இன்று (07) இரவு...

இனி ஆஸ்திரேலியர்களுக்கு $4,000 சேமிக்க ஒரு சிறப்பு வாய்ப்பு

மலிவு விலையில் சூரிய மின்கலங்களை வழங்கும் திட்டத்தை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று (06) அறிவித்தார். மே 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர்...