Cinemaடி.ராஜேந்தருக்கு உடல்நல பாதிப்பு...மேல்சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்ல முடிவு

டி.ராஜேந்தருக்கு உடல்நல பாதிப்பு…மேல்சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்ல முடிவு

-

தமிழ் சினிமா நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியில் பரவியதால், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க அவரது மகனும் நடிகருமான சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், திடீர் நெஞ்சு வலி காரணமாக எனது தந்தை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு வயிற்றில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை கவனித்தில் கொண்டு அவரை உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. எனது தந்தை நல்ல சுய நினைவுடன் உள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்து, அன்பு காட்டு ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

டி.ராஜேந்தர் விரைவில் பூரணமாக குணமடைந்து வருவார்கள். விரைவில் அவர் ரசிகர்களை மீண்டும் சந்திப்பார் என சிலம்பரசன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். டி.ராஜேந்தர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். டி.ராஜேந்தர் தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்கள். இதனால் தற்போதும் தினமும் 15 பேர் வரை அவரை சந்தித்து வருவதாக டி.ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

1980 களில் சினிமாவில் அறிமுகமான டி.ராஜேந்தர், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பல திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். டி.ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லலாமா என அவரது குடும்பத்தினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் விசா நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், வெளிநாட்டிற்கு புறப்பட உள்ளதாக உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Latest news

Bondi தாக்குதலுக்குப் பின் யூத வழிபாட்டுத் தலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, பிரித்தானியா முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. Bondi...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்...

விக்டோரியாவில் நடந்த கார் விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலி

விக்டோரியாவின் பிராந்தியப் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த மினிவேன் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மெல்பேர்ணுக்கு வடக்கே சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள முக்காத்தாவில் உள்ள...

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்...

விக்டோரியாவில் நடந்த கார் விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலி

விக்டோரியாவின் பிராந்தியப் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த மினிவேன் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மெல்பேர்ணுக்கு வடக்கே சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள முக்காத்தாவில் உள்ள...