Cinemaபிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் அட்லி முடிவு

பிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் அட்லி முடிவு

-

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து பிகில் படத்தை இயக்கினார் அட்லி. விஜய் ஹீரோவாக நடித்த இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ராயப்பன் என்ற தாதா கதாபாத்திரத்திலும், மைக்கேல் என்ற கால்பந்தாட்ட வீரர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதில் தாதா கதாபாத்திரத்தில் வயதானவர் போன்ற வேடத்தில் விஜய் நடித்திருந்தார்.

பிகில் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாக்கள் எதையும் இயக்காமல், இந்தி படங்களை இயக்க சென்று விட்டார் இயக்குனர் அட்லி. இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் லயன் என பெயரிடப்பட்ட படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்தியில் நயன்தாரா நடிக்கும் முதல் படமாகும், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் இனி நடிக்க போகும் தளபதி 68 படத்தை இயக்குனர் அட்லி தான் இயக்க போவதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்த சமயத்தில், பிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அட்லி முடிவு செய்திருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதில் ராயப்பன் என்ற வயதான கதாபாத்திரத்தை முதன்மை கதாபாத்திரமாக வைத்து இரண்டாம் பாகத்தை இயக்க அட்லி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள், சமூக வலைதள பக்கங்களில் பிகில் படம் பற்றிய புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து, இவர்களில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் யார் என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ராயப்பன் கதாபாத்திரம் பற்றிய தகவல்களையும் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். இதை பார்த்த இயக்குனர் அட்லி, தனக்கே உரிய பாணியில், செஞ்சுட்டா போச்சு என பதில் பதிவு போட்டுள்ளார். இயக்குனர் அட்லியே இவ்வாறு கூறி விட்டதால் பிகில் இரண்டாம் பாகம் வருவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...