Newsஇந்தோனேசியப் பயணம் தொடர்பில் ஆஸ்திரேலியப் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்!

இந்தோனேசியப் பயணம் தொடர்பில் ஆஸ்திரேலியப் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்!

-

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese), தமது இந்தோனேசியப் பயணம் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகக் கூறியிருக்கிறார்.

புதிய பிரதமராகப் பதவியேற்ற 2 வாரங்களுக்குப் பிறகு அவர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

தென்கிழக்காசியாவில் தமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தவிருப்பதாகத் திரு. ஆல்பனீசி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஜக்கர்த்தாவில் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் (Joko Widodo) பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு. ஆல்பனீசி, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் Penny Wong, வர்த்தக அமைச்சர் Don Farrell ஆகியோர் இந்தோனேசியாவுக்குச் செல்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, திரு. ஆல்பனீசி மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது.

கடந்த மாதம் Quad நாடுகளுக்கு இடையே நடந்த சந்திப்பில் கலந்துகொள்ள அவர் தோக்கியோ சென்றிருந்தார்.

Latest news

ஹெலிகொப்டர் கேபினுக்குள் பாய்ந்த பறவை – உயிரிழந்த ஆஸ்திரேலிய பயணி

ஆஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் பயணி ஒருவர், கேபினுக்குள் பறவை பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.  ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு Arnhem Landல் உள்ள Gapuwiyak அருகே 44 வயது நபர்...

உண்மையான யானையைப் போலவே செயல்படும் அதிநவீன ரோபோ யானை

விலங்குகள் உண்மையில் நகரும் விதத்தைப் பிரதிபலிக்கும் புதிய 3D அச்சிடும் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள EPFL இன் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, வியக்கத்தக்க...

‘கேப்டனின் தற்கொலை’ – Air India விபத்து விசாரணை

 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட Air India விமான விபத்து "கேப்டனின் தற்கொலை" காரணமாக ஏற்பட்டதாக ஒரு விமானப் போக்குவரத்து நிபுணர் நம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாத...

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான சட்டவிரோத துப்பாக்கி பாகங்களுடன் ஒருவர் கைது

கறுப்புச் சந்தையில் டஜன் கணக்கான கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்வதற்காக, அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான துப்பாக்கி பாகங்களை இறக்குமதி செய்ய முயன்றதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 34 வயதான...

சிட்னி ஷாப்பிங் சென்டரில் ஆயுதமேந்தி வந்த இருவர் – ஆயுதங்கள் பறிமுதல்

சிட்னி ஷாப்பிங் சென்டரில் நடந்த சண்டையைத் தொடர்ந்து இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை பிற்பகல் சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு பரபரப்பான...