Newsஆஸ்திரேலியா சென்ற பயணிக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி!

ஆஸ்திரேலியா சென்ற பயணிக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி!

-

சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இடைநிலைப் பயணி ஒருவருக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் ஜூன் முதல் திகதி பார்சலோனிவில் புறப்பட்டு, மறுநாள் சாங்கி விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். அதே நாளன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குப் புறப்படும்வரை, விமான நிலையத்தின் இடைவழிப் பயணிகள் காத்திருப்புப் பகுதியில் இருந்திருக்கிறார்.

அவர் விமான நிலையத்தின் மற்ற பகுதிகளுக்குச் செல்லவில்லை. அவர் சிங்கப்பூருக்குள் நுழையவில்லை; சமூக அளவில் யாரையும் தொடர்புகொள்ளவில்லை.

அதனால் குரங்கம்மைத் தொற்று சமூக அளவில் பரவும் அபாயம் குறைவு என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட இரு விமானங்களில் பயணம் செய்தவர்களின் தொடர்புத் தடங்கள் கண்டறியப்பட்டன.

நெருங்கிய தொடர்பு இருந்ததாக எவரும் கண்டறியப்படவில்லை. அதனால் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் 13 பேர் 21 நாள்களுக்குத் தொலைபேசி மூலம் கண்காணிக்கப்படுவர் என்று அது தெரிவித்தது. அவர்களின் உடல்நிலை தினமும் தொலைபேசி அழைப்புகள்மூலம் கண்காணிக்கப்படும்.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...